New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/19/pmOyuTrWARktn3xie3yZ.jpg)
பணியிடை நீக்கம் உத்தரவு பிறப்பித்த கலபுரகி காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அடுரு ஸ்ரீனிவாசுலு துணை ஆய்வாளர் திருமல்லேஷிடம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். (கோப்பு புகைப்படம்)
பணியிடை நீக்கம் உத்தரவு பிறப்பித்த கலபுரகி காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அடுரு ஸ்ரீனிவாசுலு துணை ஆய்வாளர் திருமல்லேஷிடம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். (கோப்பு புகைப்படம்)
கர்நாடகாவில் கலபுராகி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்குள் ரம்மி மற்றும் சீட்டு விளையாடும் வீடியோ வைரலானதை அடுத்து, புதன்கிழமை 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட போலீசார்களில் உதவி துணை ஆய்வாளர் மெஹ்மூத் மியா, தலைமைக் காவலர்கள் நாகராஜ், சாய்பன்னா மற்றும் இமாம், காவலர் நாகபூஷன் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் வாடி காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்று கர்நாடகா காவல்துறை தெரிவித்துள்ளது.
பணியிடை நீக்கம் உத்தரவு பிறப்பித்த கலபுரகி காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அடுரு ஸ்ரீனிவாசுலு துணை ஆய்வாளர் திருமல்லேஷிடம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஏழு வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், சீருடையில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்ட காவலர்களில் ஒருவர், இந்த செயல் பதிவு செய்யப்படுவதைக் கவனித்து, அதைப் படம்பிடிக்க வேண்டாம் என்று அந்த நபரிடம் கேட்பதைப் பார்க்க முடிகிறது.
ஒரு பெண் காவலர், சிறிது காலத்திற்கு முன்பு இந்த வீடியோவைப் படம்பிடித்து, காவல்துறையினரை மிரட்ட முயன்றதாக ஒரு காவல்துறை அதிகாரி கூறினார். “அது பழைய வீடியோவாக இருந்தாலும்கூட, காவல் நிலையத்திற்குள் சீட்டாட்டம் விளையாடுவதும் சூதாடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அந்த அதிகாரி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.