தலித்களுக்கு எதிரான வன்முறை; 101 குற்றவாளிகளில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த கர்நாடகா நீதிமன்றம்

கர்நாடகா மாநிலம் மரகும்பியில் நடைபெற்ற தலித்களுக்கு எதிரான வன்முறை; 101 பேரை குற்றவாளிகளாக அறிவித்த கொப்புள் மாவட்ட நீதிமன்றம்; 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

கர்நாடகா மாநிலம் மரகும்பியில் நடைபெற்ற தலித்களுக்கு எதிரான வன்முறை; 101 பேரை குற்றவாளிகளாக அறிவித்த கொப்புள் மாவட்ட நீதிமன்றம்; 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

author-image
WebDesk
New Update
நீதிமன்றம் முன் போராட மாட்டோம் என உறுதியளிக்க முன்னாள் எம்எல்ஏ பாலபாரதிக்கு நீதிபதி உத்தரவு!

கர்நாடகாவில் தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து எரித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

கர்நாடகாவின் கொப்பள் மாவட்டத்தில் உள்ள மரகும்பி கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலித் மக்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முடிவெட்டும் கடைகள், உணவகங்களுக்கு தலித் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் தலித் மக்களுக்கு சொந்தமான இடங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த வன்முறையை தொடர்ந்து கர்நாடகா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் வெடித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வன்முறையில் ஈடுபட்டதாக 117 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு எதிரான வழக்கு கொப்பள் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 10 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததையடுத்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 101 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முன்னதாக வழக்கு விசாரணைக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 11 பேர் இறந்து விட்டனர். இதையடுத்து, தண்டனை விவரங்களை நேற்று அறிவித்த நீதிமன்றம், குற்றவாளிகளில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை கேட்டதும் குற்றவாளிகளின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது கங்காவதி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Karnataka Dalit

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: