கர்நாடகாவின் சிக்மகளூருவில் உள்ள சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் புதன்கிழமை 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டுகளை முன்வைத்து பஜ்ரங் தள் உறுப்பினர்களால் திருமணம் செய்ய விடாமல் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்ட ஒரு கலப்பின ஜோடி, தாங்கள் காதல் திருமணம் செய்துகொள்வதாகவும், எந்த மத மாற்றம் திட்டமும் இல்லை என்றும் கூறினர். பின்னர், இவர்களின் திருமணம் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டது.
ஜாஃபர் மற்றும் சைத்ரா திருமணத்தை ‘லவ் ஜிஹாத்’ என்று கூறி பதிவு செய்வதை பஜ்ரங் தள உறுப்பினர்கள் புதன்கிழமை நிறுத்தினர். இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்கு மத்தியில், தம்பதியினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலீசார் தலையிட்டனர்.
இதையும் படியுங்கள்: ராணி எலிசபெத் உடலுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு நேரில் அஞ்சலி
டிரைவராக பணிபுரியும் 24 வயதான ஜாஃபர், தனது தந்தைக்கு மர வியாபாரத்தில் உதவுகிறார், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “நானும் சைத்ராவும் அண்டை வீட்டார்கள், நாங்கள் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்தோம். நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிவோம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் காதல் உறவு தொடங்கியது. ஆனால் அவள் மதம் மாறப் போகிறாள் என்று அர்த்தம் இல்லை. நாங்கள் ஒன்றாக வாழ விரும்புகிறோம், எங்கள் சொந்த நடைமுறைகளைப் பின்பற்றுவோம். அன்று நாங்கள் தாக்கப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் திருமணத்தில் இரு வீட்டாரும் மகிழ்ச்சியாக இருந்தனர். இப்போது திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து திருமண நிகழ்வை எப்போது, எங்கு நடத்துவது என்பது எங்களுக்குத் தெரியாது.” என்றார்.
பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த சைத்ரா, பஜ்ரங் தள் உறுப்பினர்களால் தனது சாதி வளர்க்கப்பட்டது என்றார்.
"எங்களுக்கு ஆணையிட அவர்கள் யார்?". “திருமணம் செய்துகொள்வது எங்கள் விருப்பம், நாங்கள் வாழ நாங்கள் சம்பாதிக்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கேள்வி கேட்க அவர்கள் யார்? அவர்கள் ஜாஃபரை தாக்கிய போது, ‘உனக்கு எஸ்.சி பெண்ணை திருமணம் செய்ய விருப்பமா?’ என்று கேட்க அவர்கள் யார்? எஸ்.சி பெண்கள் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள முடியாதா? என சைத்ரா கேள்வி எழுப்பினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து தலித் அமைப்புகள் ஜாஃபர் மற்றும் சைத்ராவுக்கு ஆதரவு அளித்தன.
சைத்ராவின் தாய் ஷோபா கூறுகையில், தம்பதியரை சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறினார். ஜாஃபரை எங்களுக்கு நீண்ட நாட்களாக தெரியும், அவர் என் மகளுக்கு நல்ல கணவராக இருப்பார். நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன், ஆனா அதுல யாருக்கு என்ன பிரச்சனை? என் மகள் மற்றும் மருமகன் இருவரும் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது. அவர்கள் இயல்பு வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
ஜாபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிக்மகளூருவில் உள்ள பசவனஹள்ளி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஷாமா, குரு, பிரசாத் மற்றும் பார்த்திபன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil