New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/03/karti-..-1.jpg)
Karti Chidambaram Bail Order Reserved, INX Media Case
கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிறையில் இருக்கிறார். அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
Karti Chidambaram Bail Order Reserved, INX Media Case
கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிறையில் இருக்கிறார். அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கார்த்தி சிதம்பரம், பிப்ரவரி 28-ம் தேதி ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 12 நாட்கள் அவரை சிபிஐ காவலில் வைத்து விசாரித்தது. மார்ச் 12-ம் தேதி அவரை டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.
கார்த்தி சிதம்பரம், மேற்படி வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி தனி நீதிமன்றத்தில் முறையிட்டார். அங்கு அந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 16) நடைபெற்றது. சிபிஐ தரப்பிலும், கார்த்தி சிதம்பரம் தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எஸ்.பி.கார்க் ஒத்தி வைத்தார்.
திங்கட்கிழமை அல்லது செவ்வாய் கிழமை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.