New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/03/a543.jpg)
கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் விசாரணை காவல்
ஐஎன்எக்ஸ் மீடியா நிதி மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் விசாரணை காவல்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக போது, அவரின் மகன் கார்த்தி சிதம்பரம், அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தனது தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி, கார்த்தி சிதம்பரம் அந்நிறுவனத்தை தனது கட்டுபாட்டில் இயக்கி வந்தாகவும், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து கார்த்திக்கு பெருமளவில் பணம் தரப்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டு வந்தது.
பின்பு, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 28ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த 1ம் தேதி அனுமதி அளித்தது. இந்நிலையில், இன்றுடன் இந்த விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட சிபிஐ, மோசடியில் பல்வேறு நிறுவனங்களுக்கும் தொடர்பு உள்ளது என தெரிவித்தது.
இறுதியில், ஐஎன்எக்ஸ் மீடியா நிதி மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் விசாரணை காவலை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.