காஷ்மீரில் தொடரும் வன்முறை: உரி தாக்குதலில் ராணுவ வீரர் பலி

இதேபோல, மூன்று நாட்களுக்கு முன்பு, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலுள்ள அகல் காட்டுப் பகுதியில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், இரண்டு வீரர்கள் காயமடைந்தனர்.

இதேபோல, மூன்று நாட்களுக்கு முன்பு, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலுள்ள அகல் காட்டுப் பகுதியில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், இரண்டு வீரர்கள் காயமடைந்தனர்.

author-image
WebDesk
New Update
Kashmir Uri Soldier Gunbattle LoC attack

Soldier killed in gunbattle along LoC in North Kashmir’s Baramulla

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில், கட்டுப்பாட்டுக் கோடு (LoC) அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இந்தச் சம்பவம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த வாரத்தில் ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்த இரண்டாவது நிகழ்வாகும்.

Advertisment

உரி செக்டாரின் சூரன்டா கிராமத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே  தீவிரமான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் வீரர் ஒருவர் உயிரிழந்தார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இது ஒரு ஊடுருவல் முயற்சியாக இருக்கலாம் அல்லது பாகிஸ்தானின் எல்லை நடவடிக்கை குழுவின் (BAT) தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, ஆனால் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

இதேபோல, மூன்று நாட்களுக்கு முன்பு, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலுள்ள அகல் காட்டுப் பகுதியில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். "இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாகத் தோன்றுகிறது" என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராணுவத்தின் தேடுதல் வேட்டை தீவிரம்

இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்திய ராணுவ வட்டாரங்கள், இந்தத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது எனக் கூறின. இந்தப் பகுதியில் “ஊடுருவல் தடுப்பு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கை” தொடங்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.

ராணுவத்தினர் இரங்கல் 

Advertisment
Advertisements

“சினார் கார்ப்ஸ், பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வீரமரணம் அடைந்த சிப்பாய் பனோத் அனில் குமாரின் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. அவரது அளப்பரிய துணிச்சலுக்கும் தியாகத்திற்கும் சினார் போர் வீரர்கள் வணக்கம் செலுத்துகின்றனர். அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும், ஒற்றுமையையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் அமைப்பு X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது இரண்டு வீரர்கள் வீரமரணமடைந்த சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த நடவடிக்கை 11 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தபோதிலும், பயங்கரவாதிகள் இன்னும் பிடிக்கப்படவில்லை.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும். 

Jammu And Kashmir

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: