கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் (கே.சி.பி.சி) வியாழக்கிழமை, ஒரே பாலினத்தைப் பற்றிய சர்ச்சின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் போப் ஒரே பாலின திருமணத்தை நியாயப்படுத்தியதாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை தவறானவை என்றும் கூறியுள்ளது.
ஒரே பாலின தொழிற்சங்கங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் ஒரு ஆவணப்படத்தில் போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்த ஒரு நாள் கழித்து, கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் (கே.சி.பி.சி) வியாழக்கிழமை, ஒரே பாலினத்தைப் பற்றிய சர்ச்சின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளது. “போப் ஒரே பாலின திருமணத்தை நியாயப்படுத்தியதாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை, தவறானவை” என்றும் கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் கூறியுள்ளது.
ரோம் திரைப்பட விழாவில் புதன்கிழமை திரையிடப்பட்ட ஒரு ஆவணப்படத்திற்காக பேட்டி காணப்பட்டபோது, போப் கூறுகையில், “ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு குடும்ப அமைப்பில் இருக்க உரிமை உண்டு. அவர்கள் தேவனுடைய பிள்ளைகள்.” என்று கூறினார்.
இந்த படத்திற்கான நேர்காணலில் போப் கூறியதாக “நம்மிடம் இருப்பது ஒரு சிவில் யூனியன் சட்டம்; அந்த வகையில் அவை சட்டப்படி பாதுகாக்கப்பட்டுள்ளன” கூறப்படுகிறது.
போப்பின் கருத்துக்கள் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து கலவையான பதில்களைப் பெற்றுள்ளன. ஆனால், வாட்டிகன், அவர் ஒரே பாலின சிவில் தொழிற்சங்கங்களுக்கு ஒப்புதல் அளித்ததை மறுக்கவில்லை.
கே.சி.சி.சி என்பது கேரளாவில் உள்ள கத்தோலிக்க ஆயர்களின் அமைப்பாகும். இது சிரோ-மலபார், லத்தீன் மற்றும் சிரோ-மலங்கரா தேவாலயங்களின் நடைமுறைகளைச் சேர்ந்தது. சிரோ-மலபார் தேவாலயத் தலைவர் கார்டினல் ஜார்ஜ் அலெஞ்சேரி கே.சி.பி.சியின் தலைவராக உள்ளார்.
கே.சி.பி.சியின் ஊடக ஆணையத்தின் தலைவர் பிஷப் ஜோசப் பம்ப்லானி, “போப் பிரான்சிஸ் பாலியல் ஒழுக்கநெறி குறித்த சர்ச் போதனைகளை மறுக்கும் எந்த நிலைப்பாட்டையும் ஏற்கவில்லை.” என்று கூறினார்.
கே.சி.பி.சி செய்தித் தொடர்பாளர் பாதிரியார் ஜேக்கப் பாலக்கப்பள்ளி கூறுகையில், “கத்தோலிக்க திருச்சபை குடும்ப வாழ்க்கை மற்றும் ஓரினச்சேர்க்கை குறித்த தனது நிலைப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யவில்லை. சர்ச் ஆவணப்படங்கள் மூலம் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த அறிவுரைகளை வழங்கவில்லை. எல்.ஜி.பி.டி பிரிவில் உள்ளவர்கள் கடவுளின் குழந்தைகள் என்றும் அவர்கள் சிறப்பு கவனிப்புக்கும் அன்பிற்கும் தகுதியானவர்கள் என்றும் போப் கடந்த காலத்தில் கற்பித்திருந்தார். ஒரே பாலின விருப்பங்களை ஒரே பாலினசேர்க்கை செயல்பாடுகளில் இருந்து வேறுபடுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது சர்ச்.” என்று கூறினார்.
கத்தோலிக்க திருச்சபை ஒரு பாலின சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ்வதை திருமணமாக அங்கீகரிக்கவில்லை. சில நாடுகள் சிவில் யூனியன் போன்ற உறவுகளை ஏற்றுக்கொண்டன. அந்த வகையில் வாழும் மக்களிடையே ஆயர் பணிகள் குறித்து சர்ச் ஒரு தீவிரமான குறிப்பை விடுத்துள்ளது என்று கே.சி.பி.சி தெரிவித்துள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Kerala bishops council stated no change in church stand pope didnt justify same sex marriage