Advertisment

முஸ்லிம் உருவாக்கிய ‘பாரத் மாதா கி ஜெய்’ முழக்கத்தை சங்பரிவார் கைவிடுமா - பினராயி விஜயன் கேள்வி

தனது கருத்தை நிரூபிக்க வரலாற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளைத் தந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், அசிமுல்லா கான் என்ற முஸ்லிம் 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கத்தை உருவாக்கியதாகக் கூறினார்.

author-image
WebDesk
New Update
Pinarayi Vijayan

கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதலில் எழுப்பியது அபித் ஹசன் என்ற பழைய தூதர்தான் என்று கூறினர். (கோப்பு படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் ‘ஜெய் ஹிந்த்’ ஆகிய இரண்டு முழக்கங்களும் முதலில் முஸ்லிம்களால் எழுப்பப்பட்டவை, அவற்றைக் கைவிட சங்பரிவார் தயாரா என்று திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Will Sangh Parivar abandon slogan ‘Bharat Mata Ki Jai’ coined by a Muslim, Kerala CM asks

இந்த முஸ்லீம் ஆதிக்கம் நிறைந்த வடக்கு கேரள மாவட்டத்தில் சிறுபான்மை சமூகத்தை அணுகிய மூத்த சி.பி.ஐ(எம்) தலைவர், நாட்டின் வரலாறு மற்றும் சுதந்திர இயக்கத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள், கலாச்சார சின்னங்கள் மற்றும் அதிகாரிகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர் என்று கூறினார்.

தனது கருத்தை நிரூபிக்க வரலாற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளைக் கொண்டுவந்த பினராயி விஜயன், அசிமுல்லா கான் என்ற முஸ்லிம் ‘பாரத் மாதா கி ஜெய்’ முழக்கத்தை உருவாக்கியதாகக் கூறினார்.

“இங்கு வந்த சில சங்க பரிவார் தலைவர்கள் தங்கள் முன் அமர்ந்திருந்தவர்களை ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழக்கமிடச் சொன்னார்கள். கோஷத்தை உருவாக்கியவர் யார்? அவர் பெயர் அசிமுல்லா கான் என்பது சங்பரிவாருக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

இந்த முழக்கத்தைக் கொண்டு வந்தது ஒரு முஸ்லிம் என்பதால் அவர்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பது எனக்கு தெரியாது என்று பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக சி.பி.ஐ(எம்) கேரள மாநிலத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக நடத்தியக் கூட்டத்தில் விஜயன் பேசினார்.

அபித் ஹசன் என்ற பழைய தூதர் முதலில் ‘ஜெய் ஹிந்த்’ கோஷத்தை எழுப்பியதாக பினராயின் விஜயன் கூறினார்.

மேலும், முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகன் தாரா ஷிகோவின் அசல் சமஸ்கிருத உரையிலிருந்து பாரசீக மொழியில் 50-க்கும் மேற்பட்ட உபநிடதங்களின் மொழிபெயர்ப்புகள் இந்திய நூல்கள் உலகம் முழுவதும் சென்றடைய உதவியது என்று பினராயி விஜயன் கூறினார்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு முஸ்லிம்களை நாடு கடத்த வேண்டும் என்று வாதிடும் சங்பரிவார் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த வரலாற்றுச் சூழலை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றார்.

மற்றவர்களுடன் முஸ்லிம்களும் இந்த நாட்டின் சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்காற்றினர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் சுட்டிக்காட்டினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pinarayi Vijayan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment