Advertisment

அரசு ஊழியர்கள் சம்பளத்தைக் குறைக்க அவசரச் சட்டம்: கேரள அரசு முடிவு

அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஐந்து தவனைகளில் கழிக்க வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்தைத் தொடர்ந்து, கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நிதி திரட்ட, கேரள அமைச்சரவை அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கு ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பிக்க புதன் கிழமை முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மதுக்கடை பாதுகாப்பில் காவல்துறையை ஈடுபடுத்த முடியாது;  மே 17 வரை மதுக்கடைகள் திறக்கப்படாது - பினராயி விஜயன்

அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஐந்து தவனைகளில் கழிக்க வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்தைத் தொடர்ந்து, கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நிதி திரட்ட, கேரள அமைச்சரவை அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கு ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பிக்க புதன் கிழமை முடிவு செய்துள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை அடுத்து ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை கழிக்க கேரள அரசு முன்னர் முடிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து அரசு ஊழியர்களின் சங்கங்கள் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அரசின் இந்த உத்தரவை அம்மாநில உயர் நீதிமன்றம் 2 மாதங்களுக்கு தடை விதித்தது.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், அரசு ஊழியர்களின் சம்பளத்தை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் தொற்று நோய்கள் சட்டத்திலோ அல்லது பேரிடர் மேலாண்மை சட்டத்திலோ இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து, அமைச்சரவை இந்த அவசரச் சட்டத்தை பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர மொத்த சம்பளத்தில் 30 சதவீதம் குறைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்க ஆளுநர் பரிந்துரைப்பார் என்றும் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India Coronavirus Kerala Pinarayi Vijayan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment