கேரளா பள்ளியில் ராகிங்: 'சீனியர்களை மதிக்கவில்லை'; மாணவனை அடித்து, கையை உடைத்த கொடூரம்

கேரளாவில், மற்றொரு ராகிங் வழக்கு, இந்த முறை ஒரு பள்ளியில் இருந்து: 'சீனியர்களை மதிக்கவில்லை' என்பதற்காக ஜூனியர் மாணவனை அடித்து, கை முறிவுக்கு வழிவகுத்த கொடூரம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kerala school

பள்ளி பிரதிநிதித்துவ படம் (எக்ஸ்பிரஸ் காப்பக புகைப்படம் – அபிஷேக் சஹா)

Shaju Philip

Advertisment

கண்ணூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஜூனியர் ஒருவரைத் தாக்கியதாக 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். கோட்டயம் செவிலியர் கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவத்தில் ஐந்து கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் வந்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: In Kerala, another ragging case, this time from a school: Boy beaten, hand fractured for ‘not respecting seniors’

காவல்துறையின் கூற்றுப்படி, பிப்ரவரி 12 அன்று "சீனியர்களை மதிக்கவில்லை" என்பதற்காக ஐந்து மாணவர்கள் ஜூனியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

18 வயதுக்கு மேற்பட்ட 5 மாணவர்கள் மீது காயம் ஏற்படுத்தியதற்காகவும், சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்தியதற்காகவும் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கொளவலூர் போலீஸார் தெரிவித்தனர். அவர்களில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

”ராகிங் குறித்த புகாரை பள்ளி அதிகாரிகள் கொடுத்தவுடன், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கேரள ராகிங் தடுப்புச் சட்டத்தின் 3 மற்றும் 4 (கல்வி நிறுவனத்திற்குள் ராகிங்) பிரிவுகளை போலீசார் செயல்படுத்துவார்கள்,” என்று ஒரு அதிகாரி கூறினார்.

இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆரில்., மாணவர்கள் கேன்டீனில் இருந்த மாணவரை தடுத்து நிறுத்தி, உதைத்ததால், கை முறிவு மற்றும் பலத்த காயங்களுக்கு வழிவகுத்தது என்று குறிப்பிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார். “ராகிங் தடுப்புக் குழு கூடி பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது. விரைவில் போலீசில் புகார் அளிப்போம்,'' என்று பள்ளி முதல்வர் கூறினார்.

கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் ராகிங் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில், முதலாம் ஆண்டு மாணவரை தாக்கி மிரட்டி பணம் பறித்த ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி சதீசன், கோட்டயம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களுக்கு ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் வயநாட்டில் உள்ள தனது விடுதியில் இறந்து கிடந்த கால்நடை மருத்துவ மாணவர் சித்தார்த்தனின் மரணம் ராகிங் சம்பவத்துடன் தொடர்புடையது என்றும் சதீசன் கூறினார்.

“குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் எஸ்.எஃப்.ஐ.யுடன் தொடர்புடைய கேரள அரசு நர்சிங் மாணவர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர். எஸ்.எப்.ஐ கலைக்கப்பட வேண்டும். போதைப்பொருள் மற்றும் மதுபானம் வாங்குவதற்காக பணம் கேட்டு மாணவர்களை தாக்குகின்றனர். கடந்த ஆண்டு வயநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் சித்தார்த்தன் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதன் தொடர்ச்சிதான் செவிலியர் கல்லூரியில் மாணவி மீதான தாக்குதல். எஸ்.எஃப்.ஐ.,ன் உள்ளூர் தலைவர்களாக இருந்த குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்களை சி.பி.ஐ(எம்) CPI(M) எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை நாங்கள் பார்த்தோம்,” என்று சதீசன் குற்றம் சாட்டினார்.

கோட்டயம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

“இப்போது சஸ்பெண்ட்டில் உள்ள மாணவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குனரும் விசாரணை நடத்தி வருகிறார். ஜூனியர் மாணவர்களின் அறைகளுக்கு சீனியர்கள் செல்லும் போது விடுதி அதிகாரிகள் ஏன் கவனிக்கவில்லை என்பது குறித்து குறிப்பாக ஆராயப்படும்,'' என்றார்.

Kerala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: