Advertisment

கேரளத்தில் நிபா வைரஸ்; சிறுவன் உயிரிழப்பு: உச்சக்கட்ட அலர்ட்!

மேலும் 4 பேருக்கு நிபா அறிகுறி இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் உயிர் காக்கும் சிகிச்சையில் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Kerala teen who tested positive for Nipah dies in Kozhikode hospital

கேரளாவில் 2018 ஆம் ஆண்டு முதல் ஐந்து நிபா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை ஆறு நோயாளிகள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன், நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவருக்கு 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை முதல் வென்டிலேட்டர் ஆதரவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய நிலவரப்படி, டீன் ஏஜ் சிறுவன் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது குறித்து சுகாதாரத் துறைக்கு தெரியவில்லை. NIV-Pune சனிக்கிழமையன்று அவருக்கு நிபா வைரஸ் இருப்பதை உறுதிசெய்த பிறகு, சிறுவன் ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான்.

Advertisment

காலை 10:50 மணிக்கு சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், 11:30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் மலப்புரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், "அவரது உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை NIV-புனேயில் இருந்து மோனோக்ளோனல் ஆன்டிபாடியின் அளவுகள் கொண்டுவரப்பட்டன. ஆன்டிபாடியை வழங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை மருத்துவக் குழு ஒன்று கூடியது,'' என்றார்.

அவரது சிகிச்சைக்கான மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் அளவுகள் புனேவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கோழிக்கோடு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதற்கு முன்பே அவர் உயிரிழந்தார். நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நெறிமுறைப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

ஆங்கிலத்தில் வாசிக்க : Kerala teen, who tested positive for Nipah, dies in Kozhikode hospital

மலப்புரத்தில் சுகாதாரத் துறை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது, அங்கு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் முகமூடி அணிய அறிவுறுத்தப்பட்டனர் மற்றும் சிறுவன் இருக்கும் கிராமமான பாண்டிக்காடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் லாக்டவுன்கள் நடைமுறையில் உள்ளன.

இதற்கிடையில், 'மேலும் 4 பேருக்கு நிபா அறிகுறி இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் உயிர் காக்கும் கருவிகள் ஆதரவில் சிகிச்சையில் இருக்கிறார்” என்றும் ஜார்ஜ் கூறினார். அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. சிறுவனின் தொடர்பு பட்டியலில் இருந்த சுமார் 240 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

தொடர்ந்து, “கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், திருவனந்தபுரத்தில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலும் மாதிரிகளை பரிசோதிக்கும் வசதி இருந்தாலும், என்ஐவி-புனேயில் இருந்து ஒரு மொபைல் லேப் பரிசோதனைக்காக மலப்புரத்திற்கு கொண்டு வரப்படும். அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ள அனைவரின் மாதிரிகளும் பரிசோதிக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

கேரளாவில் 2018 ஆம் ஆண்டு முதல் ஐந்து நிபா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை, 2018-ல் கோழிக்கோடு ஒருவரும், 2019-ல் கொச்சியில் மற்றொருவரும், 2023-ல் கோழிக்கோடு நான்கு நோயாளிகளும் உயிர் பிழைத்துள்ளனர். 2018-ல் பாதிக்கப்பட்ட 18 பேரில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் 2021 இல், ஒரு மரணம் இருந்தது. 2023 ஆம் ஆண்டில், இரண்டு நிபா மரணங்கள் பதிவாகியுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala Nipah Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment