Advertisment

அமைச்சரவை முக்கிய முடிவுகள்: 10,000 இ-பஸ்கள்; இந்திய ரயில்வேயின் 7 மல்டி டிராக்கிங் திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ) கூட்டத்தில் இந்த முடிவுகள் நிறைவேற்றப்பட்டன.

author-image
WebDesk
New Update
union cabinet, Cabinet Committee on Economic Affairs, PM e-bus Sewa, PM Vishwakarma Scheme, அமைச்சரவை முக்கிய முடிவுகள், பிரதமர் மோடி, 10,000 இ-பஸ்கள், இந்திய ரயில்வேயின் 7 மல்டி டிராக்கிங் திட்டம், projects of Indian Railways, digital india programme, Tamil indian express news

மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் அனுராக் தாக்கூர்

மத்திய அமைச்சரவை புதன்கிழமையன்று, பிரதமரின் இ-பஸ் (PM-eBus) சேவையில் இருந்து நகரப் பேருந்துகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வரை இந்திய ரயில்வேயின் 32,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஏழு மல்டி-டிராக்கிங் திட்டங்கள் வரையிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisment

இந்த முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பிரதமரின் - இ-பஸ் (PM-eBus) சேவை:

பசுமை இயக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், நகரப் பேருந்து இயக்கங்களை அதிகரிப்பதற்காக பிரதமர் இ-பஸ் சேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 169 நகரங்களில் பொது-தனியார் கூட்டு நடவடிக்கை (பிபிபி) மாதிரியில் மொத்தம் 10,000 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.

இதற்கிடையில், இந்த திட்டத்தின் ‘பசுமை நகர்ப்புற நகர்வு முன்முயற்சி’ உள்கட்டமைப்பின் கீழ், மல்டிமாடல் இன்டர்சேஞ்ச் வசதிகள் மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (NCMC) அடிப்படையிலான தானியங்கி கட்டண வசூல் அமைப்புகள் 181 நகரங்களில் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 3 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களை உள்ளடக்கி இருக்கும். ஒழுங்கமைக்கப்பட்ட பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.57,613 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.20,000 கோடியை மத்திய அரசு வழங்கும்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் (PM Vishwakarma Scheme)

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்த இந்தத் திட்டம், நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ரூ.2 லட்சம் வரை மானியக் கடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கைவினைஞர்களுக்கு முதல் தவணையாக ரூ.1 லட்சமும், இரண்டாவது தவணையாக ரூ.2 லட்சமும் மானியத்துடன் கூடிய கடனாக 5% வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.

செப்டம்பர் 17-ம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி அன்று ரூ.13,000 கோடி நிதி செலவில் இந்தத் திட்டம் தொடங்கப்படும்.

இந்திய ரயில்வேயின் 7 திட்டங்கள்

32,500 கோடி மதிப்பீட்டில் ரயில்வே அமைச்சகத்தின் 7 மல்டி டிராக்கிங் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு நிதியுதவி அளிக்கும் மற்றும் நாட்டின் 9 மாநிலங்களில் (ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்) 39 மாவட்டங்களை உள்ளடக்கி இருக்கும்.

முன்மொழியப்பட்ட இந்த திட்டங்கள் இந்திய ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பை 2339 கிமீ நீளம் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தற்போதுள்ள பாதையின் திறனை அதிகரிப்பது, ரயில் செயல்பாடுகளை சீராக்குவது, நெரிசலைக் குறைப்பது, பயணம் மற்றும் போக்குவரத்தை எளிதாக்குவதையும் அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

14,903 கோடி செலவில் டிஜிட்டல் இந்தியா நீட்டிப்பு திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விரிவாக்கப்பட்ட திட்டம் 6.25 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை மீண்டும் திறன் மற்றும் திறன்களை மேம்படுத்துவதையும் 2.65 லட்சம் நபர்களுக்கு தகவல் பாதுகாப்பில் பயிற்சி அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் AI தொழில்நுட்பத்தால் - இயக்கப்படும் பன்மொழி மொழிபெயர்ப்புக் கருவி - பன்மொழி அறிவிப்பு - 22 அட்டவணையில் உள்ள Vlll மொழிகளில் வெளியிடப்படும். மேலும், 9 சூப்பர் கம்ப்யூட்டர்கள் தேசிய சூப்பர் கணினி இயக்கத்தின் கீழ் சேர்க்கப்படும்.

அடுக்கு 2/3 நகரங்களில் 1,200 புதிய ஸ்டார்ட்அப்களை ஆதரிப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களின் டிஜிட்டல் பதிப்புகளை அணுக அனுமதிக்கும் அரசாங்கத்தின் DigiLocker இயங்குதளம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) ஒரு முழுமையான செயலியாக விரிவுபடுத்தப்படும், இதைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் தங்கள் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்பட்டு பெறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

India Cabinet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment