டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவிற்கு, நாடு முழுவதிலும் இருந்து, பழங்குடியின சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் இருந்து ஒரே ஒரு பழங்குடியின மன்னர் அழைக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் ராமன் ராஜமன்னன். கிட்டத்தட்ட 3000 பழங்குடியின குடும்பத்திற்கு அவர் தலைவராக இருக்கிறார்.
Read In English: King with no throne — who is Raman Rajamannan, Kerala’s only tribal king invited to Republic Day ceremony
ஆட்சி செய்வதற்கு அவருக்கு வேறு ராஜ்ஜியம் இல்லை, ஆனால் அவர், கவனித்துக் கொள்ள ஒரு மக்கள் உள்ளனர். ஒரு சாதாரண வீட்டில் வசிக்கிறார். அவரது "தலைநகரம்" இடுக்கியின் காஞ்சியார் பஞ்சாயத்தின் கீழ் உள்ள கோழிமலா கிராமம். மன்னன் சமூகத்தின் மன்னரும் கேரளாவின் ஒரே பழங்குடி மன்னருமான ராமன் ராஜமன்னன் வரும் ஜனவரி 26 அன்று, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தனது மனைவி, பினுமோலுவுடன் இருப்பார்.
12 ஆண்டுகளுக்கு முன்பு முந்தைய மன்னர் ஆரிய ராஜமன்னனின் மரணத்திற்குப் பிறகு உருவக அரியணையில் ஏறிய ராமன், மன்னன்களின் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் தலைவராக உள்ளார். இது குறித்து, கடந்த 2017-ம் ஆண்டு, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தகவலின்படி, சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு இடையேயான கடுமையான போரை அடுத்து பல பழங்குடியினர் இன்றைய தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட காலத்திலிருந்து அவர்களின் வரலாற்றைக் கண்டறிந்துள்ளனர்.
இன்று, மன்னான்கள் 46 குடியிருப்புகளில் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நிலையில், சிலர் எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களிலும் உள்ளனர். இவர்களின் பெரும்பாலும் விவசாயக் கூலிகளாகவும், தினசரி கூலிகளாகவும் பணியாற்றி வருகின்றனர், அவர்களின் தனித்துவமான பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்காக நீண்ட காலமாக ஊடக கவனத்தை ஈர்த்துள்ளனர் - அவர்களில் ஒருவரான மன்னரின் கீழ் சுயராஜ்யத்தின் தனித்துவமான அமைப்பு உள்ளது.
குலத்தில், மன்னரின் ஆலோசனை இன்னும் குடிகள் (குடியேற்றங்கள்) மீது குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. விவசாயியான 39 வயதான ராஜமன்னன் இது குறித்து கூறுகையில், குல விவகாரங்களில் அவரது பங்கு குறைவாக இருந்தாலும், அவருக்கு அரசராக அதிகாரப்பூர்வ "பங்கு அல்லது உரிமைகள்" இல்லை என்றாலும், மக்கள் அவரை அப்படியே அங்கீகரிக்கின்றனர். “எங்கள் மக்கள் விவசாயிகளாகவும், தினசரி கூலித் தொழிலாளர்களாகவும் வேலை செய்கிறார்கள். அவர்களில் பலர் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத் திட்டத்தைச் சார்ந்துள்ளனர். மற்றவர்களில் ஒரு பகுதியினர் வன விளைபொருட்களை வாங்கும் பாரம்பரிய வேலையில் ஈடுபட்டுள்ளனர்,'' என்று அவர் கூறினார்.
தனது மனைவி, பினுமோலுடன் ஏற்கனவே டெல்லியில் இருக்கும் ராஜமன்னன், பழங்குடி "ராஜா"விற்கு, குடியரசு தின விழாவுக்கு அழைப்பு விடுத்தது "ஒரு மரியாதை". 80களின் முற்பகுதியில், (மன்னன்) சமூகத்தைச் சேர்ந்த பாண்டியன், டெல்லியில் நடந்த குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். விழாவிற்கு அழைக்கப்பட்ட சமூகத்திலிருந்து நான்தான் முதல் மன்னர். (கேரள) எஸ்சி/எஸ்டி துறையால், ஒவ்வொரு மாநிலமும் கொண்டாட்டங்களுக்கு ஒரு பழங்குடி ஜோடியை அனுப்பும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு நவம்பரில் அனைத்து சம்பிரதாயங்களையும் முடிக்குமாறு எனக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று கூறியுள்ளார்.