விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் (MoA&FW) விவசாயிகளின் அடையாள அட்டையை விரைவாக உருவாக்குவதை உறுதி செய்வதற்காக முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது. கிசான் பெச்சன் பத்ரா (Kisan Pehchaan Patra) அல்லது உழவர் ஐ.டி (Farmer ID) என்பது ஆதார்-இணைக்கப்பட்ட தனித்துவமான டிஜிட்டல் அடையாளமாகும், இது மாநிலத்தின் நிலப் பதிவுகளுடன் மாறும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் மக்கள்தொகை, விதைக்கப்பட்ட பயிர்கள் மற்றும் உரிமை விவரங்கள் போன்ற தகவல்களைக் கொண்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Kisan Pehchaan Patra: Centre instructs states to make digital farmer IDs faster
உழவர் ஐ.டி மூலம் உருவாக்கப்பட்ட தரவுத்தளமானது விவசாயி பதிவேடு என அறியப்படும், இது வேளாண் துறையில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான மத்திய அரசின் டிஜிட்டல் வேளாண்மை மிஷனின் அக்ரி ஸ்டேக் கூறுகளின் கீழ் உள்ள மூன்று பதிவுகளில் ஒன்றாகும், இதற்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
2024-25 நிதியாண்டில் 6 கோடி விவசாயிகளும், 2025-26 நிதியாண்டில் மூன்று கோடி விவசாயிகளும், 2026-27ல் இரண்டு கோடி விவசாயிகளும் என 11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அடையாளங்களை உருவாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால்தான் விவசாயி அடையாள அட்டையை வழங்குவதற்கான முகாம்-முறை அணுகுமுறையை பின்பற்றுமாறு மாநிலங்களை மத்திய அரசு இப்போது கேட்டுக் கொண்டுள்ளது. நவம்பர் 28ம் தேதி, இது தொடர்பாக மாநிலங்களுக்கு வேளாண் அமைச்சகம் தகவல் அனுப்பியது.
"...விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மாநிலங்களுக்கு முகாம்-முறை அணுகுமுறையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது, இது உள்ளடக்கிய, திறமையான மற்றும் விரைவான விவசாயி பதிவை உறுதி செய்யும்" என்று ஒரு ஆதாரம் கூறியது.
கள அளவிலான முகாம்களை நடத்தவும், உள்ளாட்சி நிர்வாகத்தைத் திரட்டவும் மாநிலங்களை ஊக்குவிக்க, ஒரு முகாமுக்கு ரூ. 15,000 வரை ஊக்கத்தொகையாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும், மேலும் ஒரு விவசாயி ஐ.டி.,க்கு 10 ரூபாய் கூடுதல் ஊக்கத்தொகையும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
ஆதாரங்களின்படி, இந்த நிதிச் சலுகைகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) திட்டத்தின் பட்ஜெட்டில் இருந்து வழங்கப்படும்.
குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்களில் விவசாயி அடையாள அட்டை உருவாக்கம் ஏற்கனவே வேகம் பெற்றுள்ளதாகவும், அஸ்ஸாம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் கள சோதனையின் கட்டத்தில் இருப்பதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள மாநிலங்களில், பணிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாக, வட்டாரங்கள் தெரிவித்தன.
வேளாண் அமைச்சகம் வழங்கும் சலுகைகள் நிதி அமைச்சகம் அறிவித்துள்ள சிறப்பு உதவியை விட அதிகமாக இருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2024-25 ஆம் ஆண்டுக்கான மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவேட்டை உருவாக்குவதற்கு மாநிலங்களுக்கு ஊக்கத் தொகையாக 5,000 கோடி ரூபாயை நிதி அமைச்சகம் ஒதுக்கியது. மார்ச் 2025 வரை மாநிலங்கள் இந்த நிதியைப் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.