Advertisment

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்- முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக கோரும் பா.ஜ.க.

கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், இந்த சம்பவம் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி, ஆளுநரின் தலையீடு மற்றும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வாதிட்டார்.

author-image
WebDesk
New Update
West bengl

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக்கின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடந்த சோதனையின் போது அவரது ஆதரவாளர்கள் தாக்கியதில் காயமடைந்த அமலாக்கத்துறை அதிகாரி. PTI

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அமலாக்க இயக்குனரக குழு மீது திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பா.ஜ.க.வினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Advertisment

தன் தலைவர்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையை கோரி முதல்வர் மம்தா பானர்ஜியை ராஜினாமா செய்ய வேண்டும் வலியுறுத்தினர். மேலும் இந்த கும்பலில் ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோர் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, அக்கட்சியின் மேற்கு வங்க பிரிவு தலைவர் சுகந்தா மஜூம்டர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இன்று அதிர்ச்சியூட்டும் விதமாக, மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் சோதனை நடத்திய  அமலாக்கத்துறை குழு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக்கின் கிராமத்தில் 100-200 கிராமவாசிகளால் வன்முறைத் தாக்குதலை எதிர்கொண்டது.

இந்த தாக்குதலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, என்ஐஏ விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும். சட்ட அமலாக்கப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் இந்த விசாரணை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், இந்த சம்பவம் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி, ஆளுநரின் தலையீடு மற்றும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வாதிட்டார்.

சந்தேஷ்காலிக்கு துணை ராணுவப் படைகளை அனுப்புவதற்கான வலுவான வேண்டுகோளும் உள்ளது,” என்று அவர் எழுதினார்.

உயர்நீதிமன்றத்தில், நீதிபதி கங்கோபாத்யாயிடம் வழக்கறிஞர் சுதிப்தா தாஸ்குப்தா இந்த சம்பவம் குறித்து கூறியபோது, “இந்த சம்பவம் பற்றி எனக்கு தெரியாது. அப்படி ஒரு சம்பவம் நடந்தால், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்” என்றார்.

மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரான பிஜேபியின் சுவேந்து அதிகாரியும் என்ஐஏ விசாரணையைக் கோரினார்.

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஷாஜகானின் வீட்டில் சோதனை நடத்தும் போது அமலாக்கத்துறை  அதிகாரிகள் மற்றும் CRPF ஜவான்கள் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளனர்.

தேச விரோத தாக்குதல்களில் ரோஹிங்கியாக்களும் இருப்பதாக எனக்கு சந்தேகம் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர், வங்காள கவர்னர்... இந்த அராஜகத்தை நசுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

பாஜகவின் தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளரும், மேற்கு வங்க இணைப் பொறுப்பாளருமான அமித் மால்வியா, “ஷாஜஹான் ஷேக்முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு நெருக்கமானவர். இப்படித்தான் வங்காளத்தில் சட்ட விரோதம் இருக்கிறது.

ஏஜென்சி அதிகாரிகளைத் தாக்க வந்தவர்களில் பலர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், அவர்கள் தங்கள் வாக்கு வங்கிக்காக உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களால் ஆதரவளிக்கப்பட்டவர்கள். மேற்கு வங்கத்தில் டிஎம்சி ஆட்சி தொடர்வது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது”, என்றார்.

டெல்லியில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, வங்காளத்தில் முழுமையா "குண்டாயிசம்" இருக்கிறது. பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும். முதலமைச்சராக இருக்க அவருக்கு உரிமை இல்லை. ED அதிகாரிகள் காவல்துறையை உதவிக்கு அழைத்தனர், அவர்கள் மீது ஒரு கொடிய தாக்குதல் நடந்து வருவதாகக் கூறினர் மம்தா பானர்ஜியின் பாதுகாப்புடன் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.

“TMC குண்டர்கள் ED அதிகாரிகளைத் தாக்கினர்இப்போது ரோஹிங்கியாக்கள் இதைச் செய்தார்கள் என்று கூறுகின்றனர். பானர்ஜியின் கீழ் வங்காளம் ஜங்கிள் ராஜ் என்பதற்கு இணையாக மாறியது வெட்கக்கேடானது,” என்று அவர் கூறினார்.

இந்தியா கூட்டணியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூட இது அராஜகம். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று கூறியுள்ளார்.

இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் குணால் கோஷ், "சந்தேஷ்காலியில் நடந்தது ஆத்திரமூட்டலின் விளைவு" என்று கூறினார்.

மேற்கு வங்கத்தில், பாஜகவின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அமைப்புகள் மற்றும் படைகள், மக்களைத் துன்புறுத்துவதற்கும் தூண்டுவதற்கும், டிஎம்சி தலைவர் அல்லது தொழிலாளியின் வீட்டிற்குச் செல்கிறார்கள். சந்தேஷ்காலியில் அதுதான் நடந்தது’’ என்றார் கோஷ்.

நீதிபதி கங்கோபாத்யாயாவின் கருத்துக்களை "தாக்குதல்" மற்றும் "பதவியை அவமதிப்பது" என்றும் அவர் விமர்சித்தார்.

அமலாக்கத்துறை சிபிஐயை மக்கள் பாஜகவாகவே பார்க்கிறார்கள். இப்போது ED அல்லது CBI மாநில அரசையோ, காவல்துறையையோ கண்ணிக்குள் வைத்திருக்கவில்லை.

தலைமைச் செயலாளரிடம் சொன்னால், எந்தெந்தப் பகுதிகள் பிரச்னை உள்ளவை, எந்த நேரத்தில், என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் ஏஜென்சிக்குத் தெரிவிக்கலாம்... இது தெரியாமல் மத்திய ஏஜென்சிகள் தாங்களாகவே செயல்படுகின்றன,” என்று கோஷ் கூறினார்.

மாநில தொழில்துறை அமைச்சர் சஷி பஞ்சா, “நாங்கள் வன்முறையை ஊக்குவிக்கவோ ஆதரிக்கவோ இல்லை. ஆனால், ஏஜென்சிகள் மூலம் வங்காளத்தை பாஜக குறிவைக்கிறது. இதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள்என்றார்.

Read in English: Kolkata to Delhi, chorus in BJP: Mamata must quit, let NIA probe

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment