Advertisment

புதுச்சேரியில் குபேர் அங்காடி வியாபாரிகள் முதலமைச்சர் ரெங்கசாமியுடன் சந்திப்பு: முக்கிய கோரிக்கை

புதுச்சேரியில் குபேர் அங்காடி வியாபாரிகள் முதலமைச்சர் ரெங்கசாமியை சந்தித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kuber shopkeepers meet Chief Minister Rengaswamy in Puducherry

புதுச்சேரியில் குபேர் அங்காடி வியாபாரிகள் முதலமைச்சர் ரெங்கசாமியை சந்தித்தனர்.

புதுச்சேரியில் குபேர் அங்காடி என்று அழைக்கப்படும் பாரம்பரியமான பெரிய மார்க்கெட் முழுவதுமாக இடித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மூன்று மாடிக்கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வந்தது ஆரம்ப கட்டத்தில் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் தற்போது வியாபாரிகள் நலன் கருதி பெரிய மார்க்கெட்டை முழுவதுமாக இடிக்காமல் பகுதி பகுதியாக இடித்து புதியதாக கடைகளை கட்ட அரசு முடிவு செய்துள்ளது.

Advertisment

இந்தப் பணிகள் விரைவில் நடைபெற உள்ளன. இதற்காக பெரிய மார்க்கெட்டில் உள்ள ஒரு பகுதியை மட்டும் தற்போது இடித்துவிட்டு புதியதாக கட்ட அரசு முடிவு செய்துள்ளது.

அங்குள்ள வியாபாரிகளுக்கு பழைய சிறைச்சாலை வளாகத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் புதுச்சேரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் ஆகியோரை சட்டசபையில் சந்தித்து பேசினார்கள்.

அப்போது பகுதி பகுதியாக மார்க்கெட் இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டும்பொழுது வியாபாரிகள் பாதிக்காத வண்ணம் அதாவது நிரந்தர கடை வைத்திருப்பார்கள் மற்றும் அடிக்காசு கடைக்காரர்கள் பாதிக்காத வண்ணம் பழைய சிறைச்சாலை வளாகத்தில் அனைவருக்குமே கடைகளை ஒதுக்கி தர வேண்டும்

பெரிய மார்க்கெட்டில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்குள் வியாபாரிகளின் பெயரில் பெயர் மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மார்க்கெட்டை இடித்து கட்டிய பிறகு பழைய வாடகையை உயர்த்தாமல் தொடர்வதற்கு உத்தரவாதம் அளித்திட வேண்டும்.

மார்க்கெட்டில் தற்பொழுது கடை வைத்துள்ள அனைவருக்கும் தரை தளத்தி கடைகளை கட்டிக் கொடுப்பதற்கு ஏற்ப வரைபடத்தை மாற்றி அமைத்து கட்டுமான பணியை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுமான பணியை நான்கு பிரிவுகளாக பிரித்து கட்டுவதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் இதனை கனிவுடன் கேட்டுக் கொண்ட முதலமைச்சர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment