Shubhajit Roy
லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியில் (LAC) இந்தியாவும் சீனாவும் 'முழுமையான படைவிலகலை' முன்னெடுத்து செல்ல ஒப்புக்கொண்டதாக புது டெல்லி நான்கு நாட்களுக்கு முன்பு அறிவித்த நிலையில், ராஜாங்க மற்றும் இராணுவ நிலையிலான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளால் இரு நாடுகளை சேர்ந்த எல்லைத் துருப்புகள் பெருவாரியான பகுதிகளில் இருந்து பின்வாங்கியாக பெய்ஜிங் நேற்று தெரிவித்தது.
இந்த வார இறுதியில் பிஎல்ஏவின் கமாண்டர்கள், இந்திய இராணுவத்தினர் இடையிலான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்குமுன் சீனா வெளிவிவகார அமைச்சகத்தின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, இந்திய அரசாங்கத்திடமிருந்தோ அல்லது இந்திய இராணுவத்திலிருந்தோ உத்தியோகபூர்வ பதில் எதுவும் இல்லை.
பாங்கோங் த்சோ எல்லைப் பகுதியில் இருந்து பின்வாங்க சீனா தயக்கம் காட்டிவருவதால்,முழுமையான படைவிலகல் செயல்முறை சிக்கலானதாக உள்ளது. எனவே,பாங்கோங் த்சோ பகுதியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தான் இந்தியா மற்றும் சீனா கமாண்டர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் மையமாக இருக்கக்கூடும். கடந்த மே மாத தொடக்கத்தில், ஏரியின் வடக்குக் கரையில் இரு நாட்டு துருப்புக்கள் இடையே ஏற்பட்ட மோதல் பதட்டமான சூழலுக்கு வழி வகுத்தது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
பெய்ஜிங்கில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில் : “சீனாவும், இந்தியாவும் ராஜாங்க மற்றும் இராணுவ நிலையில் படை விலகல் நடவடிக்கையை முன்னெடுத்து செல்கின்றது. இரு நாட்டு கமாண்டர்களுக்கு இடையே நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு நடைபெற்றது. மேலும், இந்திய – சீன எல்லை விவகாரங்கள் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு செயல் திட்டத்தின் கீழ் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது" என்று தெரிவித்தார்.
"பெரும்பாலான பகுதிகளில் இரு நாட்டு ராணுவங்கள் பின்வாங்கி வருவதால், எல்லைப் பகுதியில் பதட்டம் குறைந்து வருகிறது. தற்போது, நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க இரு தரப்பினரும் ஐந்தாவது சுற்று ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். முழுமையான படை விலகல் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் இந்தியா செயல்படும், தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, இந்திய – சீன எல்லை விவகாரங்கள் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு செயல் முறைமையின் கீழ் நடந்த மெய்நிகர் கூட்டத்திற்குப் பிறகு, இரு தரப்பினரும் " எல்லைப் பகுதியில் முழுமையான, விரைவான படைவிலகல் செயல்முறை குறித்து ஒப்புக் கொண்டதாகக் புது டெல்லி தெரிவித்தது .
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.