Advertisment

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; லட்சத்தீவு 17 தீவுகளுக்குள் நுழைய தடை

தேங்காய்களை அறுவடை செய்வதற்காக தொழிலாளர்கள் தங்குவதற்கு தற்காலிக கட்டமைப்புகளைக் கொண்ட, மக்கள் வசிக்காத தீவுகளில் இருந்து பயங்கரவாதம் அல்லது கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க லட்சத்தீவு நிர்வாகத்தால் டிசம்பர் 28-ம் தேதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lakshadweep, national security, Lakshadweep islands, uninhabited islands, லட்சத்தீவுகள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், லட்சத்தீவில் 17 தீவுகளுக்குள் நுழையத் தடை, no entry in Lakshadweep islands, Tamil indian express

தேங்காய்களை அறுவடை செய்வதற்காக தொழிலாளர்கள் தங்குவதற்கு தற்காலிக கட்டமைப்புகளைக் கொண்ட, மக்கள் வசிக்காத தீவுகளில் இருந்து பயங்கரவாதம் அல்லது கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க லட்சத்தீவு நிர்வாகத்தால் டிசம்பர் 28-ம் தேதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

லட்சத்தீவு நிர்வாகம், தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கவலைகளைக் காரணம் காட்டி, மொத்தமுள்ள 36 தீவுகளில் 17 தீவுகளுக்குள் நுழைவதைத் தடை செய்துள்ளது. இந்த 17 தீவுகள் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் மக்கள் வசிக்காத தீவுகள் ஆகும். இந்த தீவுகளில் நுழைய துணை மாஜிஸ்திரேட்டின் அனுமதி தேவை.

இது தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) பிரிவு 144-ன் கீழ் லட்சத்தீவு மாவட்ட நீதிபதி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேங்காய் அறுவடை செய்யும் தொழிலாளர்களின் வீடுகளாக தற்காலிக கட்டமைப்புகளைக் கொண்ட மக்கள் வசிக்காத தீவுகளில் பயங்கரவாத அல்லது கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் புதன்கிழமை இந்த அறிவிப்பின் மீது முடிவு எடுக்கப்பட்டது.

அவர்களில் சட்டவிரோத, சமூக விரோத மற்றும் தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்களும் இருக்கலாம். எனவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லட்சத்தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“மக்கள் வசிக்காத சில தீவுகளில் தேங்காய்களை அறுவடை செய்வதற்காக தொழிலாளர்கள் தங்குவதற்கு தற்காலிக கட்டமைப்புகள் இருப்பதால், இந்த தொழிலாளர்களுடன் சட்டவிரோத, சமூக விரோத மற்றும் கடத்தல் போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களும் உள்ளனர் என்பதை நிராகரிக்க முடியாது. ஆயுதங்கள் அல்லது போதைப்பொருட்களை மறைத்து வைப்பதற்காக தங்குமிடம் அல்லது மறைவிடத்தை நாடுகின்றனர்” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாத குழுக்கள் அல்லது அமைப்புகள் நாட்டின் முக்கியமான இடங்களையும் முக்கிய நிறுவனங்களையும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களையும் தாக்கி சேதப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

“பயங்கரவாதத்தால் எழுந்துள்ள மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் தடுக்கவும், வன்முறை மற்றும் தேசவிரோத செயல்கள், கடத்தல், சட்டவிரோத செயல்கள், சமூக விரோத நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் முக்கியமான ராணுவ மற்றும் துணை ராணுவம், தொழில்துறை இடங்கள் மற்றும் மத வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும் பொது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதற்கான சாத்தியங்களைத் தடுக்கவும் மக்கள் வசிக்காத லட்சத்தீவின் 17 தீவுகளில் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி நுழைவதைத் தடை செய்வது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன்” என்று மாவட்ட மேஜிஸ்ட்ரேட் உத்தரவில் கூறியுள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) பிரிவு 188 (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்) கீழ் தண்டனையை மீறுபவர்களுக்கு ஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Lakshadweep
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment