Advertisment

ஹரியானாவில் சண்டிகரை விட மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் புதிய நகரம்

ஹரியானாவின் தலைநகர் சண்டிகரை விட பெரியதாகவும் கூர்கனை விட சிறியதாகவும் உருவாகி வரும் புதிய நகரம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Haryana new city

Haryana new city

ஹரியானாவில் 50,000 ஹெக்டர் பரப்பளவில் உருவாகின்றது மிகப் பெரிய நகரம். ஹரியானாவின் தலைநகர் சண்டிகரை (11,400 ஹெக்டர்) விட பெரியதாகவும், கூர்கனை (73, 200 ஹெக்டரை) விட சற்று சிறியதாகவும் அமையப் போகின்றது அந்நகரம்.

Advertisment

ஹரியானா மாநிலத்தின் தொழிற்துறை மட்டும் உள்கட்டமைப்புத் துறை வாரியம் இது தொடர்பாக ஆய்வு செய்து ஆறு மாதங்களுக்கு பின்பு ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றது. அதன்படி தற்போது இருக்கின்ற நகரத்தையே உலகத்தரம் வாய்ந்த பெரிய நகரமாக மாற்றத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உருவாகப் போகும் புதிய நகரத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்துறை போன்ற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

இத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பகுதி நியூ டெல்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. அதன் எல்லைகளாக வடக்கில் கூர்கான் - மனேசர் நகர் பகுதியும், வட கிழக்கு பகுதியில் ஆரவல்லி மலைத் தொடர்களையும் கொண்டிருக்கும். மேற்கு பகுதியினை தேசிய நெடுஞ்சாலை NH-8 இணைக்க தெற்கு பகுதி முழுமையும் அருகில் இருக்கும் விவசாய நிலங்களை அந்த நகரத்துடன் இணைக்கும்.

இத்திட்டத்திற்கான டெண்டரினை ஜூலை 3ம் தேதி அறிவிக்க இருப்பதாக இத்திட்டத்தின் மூத்த அதிகாரி கூறியிருக்கின்றார். இந்த நகரத்தின் உருவாக்கத்தை மிகவும் சிரத்தையுடன் மேற்கொண்டு வரும் அதிகாரிகள், இதன் போக்குவரத்து மற்றும் சாலை அமைப்புகளை மிக கவனமாக கையாண்டு வருகின்றார்கள். அருகில் இருக்கும் நகரங்களுக்கு மிக எளிதில் சென்று வரக்கூடிய அளவிற்கு அது இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.

சமூகம், பொருளாதாரம், சூற்றுச் சூழல், மற்றும் நிதி என நான்கு முக்கிய பாராமீட்டர்களை கருத்தில் கொண்டுதான் இந்நகரம் வடிவமைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ, நெடுஞ்சாலைகள், உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நகரமாக இது விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், ஏற்கனவே ஹரியானாவில் இருக்கும் எதிர்கட்சிகள் இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்திருக்கின்றார்கள். இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை வைத்துக் கொண்டு எதற்காக புதிதாக நகரத்தை உருவாக்குகின்றோம் என்று கூறுவது ஏன்? இத்திட்டத்தின் மூலம் டெண்டர் அறிவிப்பது என்றால் அதை ஹரியானாவின் கிராம மற்றும் நகர நிர்வாக மையம் தான் செய்ய வேண்டும்.. அதை ஏன் வேறு நிர்வாகத்திடம் தர வேண்டும் போன்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளார்கள்.

Haryana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment