Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
இந்தியா

கிராமப்புற மையங்கள் வழியாகத் தடுப்பூசிகளுக்கு 0.5%-க்கும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன!

Less than 0-5 sign up for vaccines via rural centres govt cited to Supreme Court சுமார் 1.4 லட்சம் செயலில் உள்ள சி.எஸ்.சிக்களும் கிராமீன் மின்-ஸ்டோர்களாக செயல்பாடுகளைத் தொடங்க அனுமதி பெற்றுள்ள.

Written by WebDesk

Less than 0-5 sign up for vaccines via rural centres govt cited to Supreme Court சுமார் 1.4 லட்சம் செயலில் உள்ள சி.எஸ்.சிக்களும் கிராமீன் மின்-ஸ்டோர்களாக செயல்பாடுகளைத் தொடங்க அனுமதி பெற்றுள்ள.

author-image
WebDesk
15 Jun 2021 10:04 IST

Follow Us

New Update
Less than 0-5 sign up for vaccines via rural centres govt cited to Supreme Court Tamil News

Less than 0-5 sign up for vaccines via rural centres govt cited to Supreme Court Tamil News

Less than 0-5 sign up for vaccines via rural centres govt cited to Supreme Court : கோ-வின் தளத்தில், தடுப்பூசிக்காகக் கிராமப்புற மக்களைப் பதிவு செய்ய பொது சேவை மையங்கள் (Common Service Centres (CSCs)) நிறுவப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, இதுவரை பதிவுசெய்த 3 லட்சம் சி.எஸ்.சிக்கள் மொத்த எண்ணிக்கையில், 0.5 சதவீதத்திற்கும் குறைவாகவே தடுப்பூசிக்காக மக்கள் பதிவு செய்திருக்கின்றனர்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற பதிவுகளின்படி, ஜூன் 12 வரை தடுப்பூசிக்காகப் பதிவு செய்த 28.5 கோடி மக்களில், 14.25 லட்சம் பேர் மட்டுமே சிஎஸ்சி மூலம் பதிவு செய்திருந்தனர்.

சி.எஸ்.சி-க்கள் செய்த மொத்த பதிவுகளின் எண்ணிக்கை மாதந்தோறும் ஓரளவு அதிகரித்துள்ள போதிலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியா இடையேயான இடைவெளியை இன்னும் எடுத்துக்காட்டுகிறது. மேலும், தடுப்பூசி சமபங்கு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

மே 11 வரை, 54,460 சி.எஸ்.சிக்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. அவர்கள் தடுப்பூசிக்காக வெறும் 1.7 லட்சம் பேரை மட்டுமே பதிவு செய்திருந்தனர். அதாவது, அதுவரை நாடு முழுவதும் தடுப்பூசிக்குப் பதிவு செய்த 17 கோடிக்கும் மேற்பட்டவர்களில் 0.1 சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்திருந்தனர்.

Advertisment
Advertisements

தடுப்பூசி பதிவுகளின் மெதுவான வேகத்திற்கான காரணத்தை விளக்கி, ஹரியானாவில் ஒரு சி.எஸ்.சி.யை இயக்கும் கிராம அளவிலான தொழில்முனைவோர், “தடுப்பூசிக்குப் பதிவு செய்யுமாறு நாங்கள் மக்களிடம் கேட்டால், தடுப்பூசிகள் கிடைக்குமா என்று அவர்கள் எங்களிடம் கேட்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் வாழ வேண்டும். எனவே, பதிவு செய்ய அவர்களை அதிகம் கட்டாயப்படுத்துவதில்லை” என்கிறார்.

தடுப்பூசி பற்றாக்குறை பற்றிய செய்தி உண்மையில் கிராமங்களில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வந்துள்ளது என்பதைத் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். எப்படியிருந்தாலும், தடுப்பூசி பொருட்கள் மீட்டமைக்கப்பட்டவுடன் பதிவுகளை எடுப்பதில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

"தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் தயக்கம்  காட்டுவது இன்னும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. எல்லா வகையான கட்டுக்கதைகளும் சுற்றி மிதக்கின்றன. விலையைச் சுற்றியுள்ள குழப்பங்கள் தொடர்ச்சியான பிரச்சாரத்துடன் இப்போது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போய்விட்டன. ஆனால், தடுப்பூசி உட்கொள்வது அவர்களை வலுவிழக்கச் செய்யாது என்பதை யார் எடுத்துரைப்பார்” என்று ஒரு அதிகாரி கூறினார். சமீபத்திய தரவுகளின்படி (ஜூன் 12 வரை), உத்தரபிரதேசத்தில் சி.எஸ்.சி-க்கள் இதுவரை அதிக எண்ணிக்கையிலான பதிவுகளைப் பதிவு செய்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான கிராமங்களைக் கொண்ட மாநிலத்தில், கோ-வின் தளத்தில் 5,18,422 பேரைப் பதிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து பஞ்சாப், 77,303 பேரைப் பதிவு செய்துள்ளது.

யூனியன் பிரதேசங்களில் உள்ள கிராமங்கள் மேலும் ஓரங்கட்டப்படுவதைக் காட்டின. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, தமன் மற்றும் டயு, மற்றும் லடாக் ஆகிய தீவுகளில் உள்ள சி.எஸ்.சிக்கள் முறையே 57, 10, 39, 58 மற்றும் 68 பேரை மட்டுமே பதிவு செய்துள்ளன.

கோவா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து போன்ற சிறிய மாநிலங்களும் மோசமாகப் பதிவு செய்தன. அவற்றின் சிஎஸ்சிகள் வெறும் 165; 1,165; 1,350; 1,258; மற்றும் 1,582 பேர் முறையே பதிவு செய்தன. இந்த மாநிலங்களில் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை (குறைந்தது தலா ஒரு டோஸ்) முறையே 6.57 லட்சம், 5.43 லட்சம், 5.16 லட்சம், 3.57 லட்சம் மற்றும் 3.48 லட்சமாக உள்ளது.

ஐ.டி அமைச்சகத்தால் நடத்தப்படும் மற்றும் நிர்வகிக்கப்படும் சி.எஸ்.சி-க்கள் கிராமப்புற-நகர்ப்புற டிஜிட்டல் பிளவுகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றன. இந்த கிராம-பஞ்சாயத்து மற்றும் கிராம அளவிலான புறக்காவல் நிலையங்கள் பெரும்பாலும் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டை அல்லது வங்கிக் கணக்குகளைத் திறப்பது போன்ற டிஜிட்டல் சேவைகளைக் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு உதவுகின்றன. இந்த சேவைகளைத் தவிர, சுமார் 1.4 லட்சம் செயலில் உள்ள சி.எஸ்.சிக்களும் கிராமீன் மின்-ஸ்டோர்களாக செயல்பாடுகளைத் தொடங்க அனுமதி பெற்றுள்ள. இதன் மூலம், பெரிய வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களுக்கு நேரடியாக ஆர்டர்களை வழங்க அனுமதிக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine Vaccine

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!