Advertisment

துணைநிலை ஆளுநர் தமிழிசை உயிருக்கு ஆபத்து; புதுச்சேரி அ.தி.முக செயலாளர் பகீர் தகவல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் பகிர் தகவல் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
pdy anbalagan tamilisai

புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் பகிர் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தலைமை கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் தமிழிசை உயிருக்கு பாதுகாக்கப்பற்ற ஒரு சூழ்நிலையை திட்டமிட்டு சிலர் உருவாக்கி வருகின்றனர்.

குழந்தை ஆர்த்தியின் உடலுக்கு புதுச்சேரி மாநில அமைச்சர் பெருமக்கள் ஒருவர் கூட மலரஞ்சலி செலுத்த செல்லாத நிலையில் துணைநிலை ஆளுநர் அஞ்சலி செலுத்த சென்றார் .

ஆனால் ஆளுநரின் உயிருக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் திட்டமிட்டு அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

ஆளுநர் சென்ற பொழுது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் கையில் எந்தெந்த பொருட்கள் கிடைக்கிறதோ அந்த பொருட்களைக் கொண்டு ஆளுநரின் காரின் மீது வீசி உள்ளனர். ஆளுநர் தமிழிசை காரில் இருக்கும் பொழுது ஒரு சிலர் கையால் காரின் கண்ணாடியை அடித்ததும் காரின் எதிரில் தரையில் படுத்தும் தரையில் அமர்ந்தும் ஆளுநருக்கு எதிராக அநாகரிமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி உள்ளனர்.

 ஒரு சில காவல்துறை அதிகாரிகள் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் காங்கிரஸ் கட்சி சேர்ந்து முக்கிய நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

இந்தியா கூட்டணி என்ற பெயரில் காவல்துறையினர் குறிப்பிடப்படாத சில இடங்களில் திட்டமிட்டு ஊர்வலமாக சென்று துணைநிலை ஆளுநர் மாளிகையை தாக்குகின்ற விதத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் செயல்பாடு நேற்று அமைந்திருந்தது.

ஒரு சிலர் ஆளுநர் மாளிகை வாயில் வரை சென்று இருக்கிறார்கள் அப்போது கையில் ஏதாவது பொருள் இருந்தால் தூக்கிக்கூட வீசி இருப்பார்கள்.ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்ததால்தான் ஆளுநர் மாளிகை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது அதை அகற்ற வேண்டும் என்று எந்த கட்சியை சேர்ந்தவர்கள் குரல் கொடுத்த அகற்றினார்களோ இப்ப அவர்களே துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாக்கியுள்ளனர்.

தற்போது உள்ள சூழ்நிலையில் ஆளுநர் மாளிகை தடுப்புகளில் அமைக்கப்பட்டு பாதுகாப்பு உள்ள சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது அதிமுகவின் கருத்து என அன்பழகன் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment