/indian-express-tamil/media/media_files/gCY2USUtY2vlICrJ42xK.jpg)
லோக்சபா தேர்தல்: பா.ஜ.க - ஜே.டி.எஸ் இடையே புரிந்துணர்வு; தேவகவுடா கட்சி 4 இடங்களில் போட்டி - எடியூரப்பா அறிவிப்பு
பா.ஜ.க நாடாளுமன்ற குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான அவர், கருத்துக்கணிப்பின் ஒரு பகுதியாக, மொத்தம் 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 4 மக்களவைத் தொகுதிகளில் ஜே.டி.எஸ் போட்டியிடும் என்று கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா தலைமையிலான ஜே.டி.எஸ் கட்சியுடன் பா.ஜ.க புரிந்துணர்வு செய்து கொள்ளும் என முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா வெள்ளிக்கிழமை கூறியது கர்நாடக மாநில அரசியலில் சூடு பிடித்துள்ளது.
பா.ஜ.க நாடாளுமன்ற குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான அவர், கருத்துக்கணிப்பின் ஒரு பகுதியாக, மொத்தம் 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 4 மக்களவைத் தொகுதிகளில் ஜே.டி.எஸ் போட்டியிடும் என்று கூறினார்.
“பா.ஜ.க-வுக்கும் ஜே.டி.எஸ்-க்கும் இடையே புரிந்துணர்வு இருக்கும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 மக்களவைத் தொகுதிகளை ஜே.டி.எஸ்-க்கு வழங்க ஒப்புக்கொண்டார்” என்று நான்கு முறை முதல்வராக இருந்த பா.ஜ.க தலைவர் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது எங்களுக்கு பெரும் பலத்தை அளித்துள்ளது, இது 25 அல்லது 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாக வெற்றிபெற உதவும்” என்றார். லோக்சபா தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிடும் என ஜே.டி.எஸ் தலைவர் தேவகவுடா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
கர்நாடகாவில் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 25 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அதே நேரத்தில், பா.ஜ.க ஆதரவுடன் ஒரு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.