டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் இந்த மாதத்தில் பிரதமர் மோடியை சந்திக்க இந்தியா வர உள்ளார். இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டங்கள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் எலான் மக்ஸ் பகிர்ந்துள்ளார். இந்தியாவில், பிரதமர் மோடியை சந்திக்க ஆவலாக இருக்கிறேன், என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது என்றும், இங்கே அவரது நிறுவனத்தின் தொழிச்சாலைகளை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
ஏப்ரல் 22ம் தேதி, எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், எலான் மஸ்க், மோடியை நியூயார்க்கில் வைத்து சந்தித்தார். மேலும் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
ஒரு உற்பத்தியாளர் குறைந்தபட்சம் $500 மில்லியன் முதலீடு செய்து தொழிற்சாலையை நிறுவினால், சில மாடல்களில் இறக்குமதி வரிகளை 100% இலிருந்து 15% ஆகக் குறைக்கும் புதிய எலக்ட்ரிக் வாகனத்தின் கொள்கையை இந்தியா கடந்த மாதம் வெளியிட்டது. இந்த வாரம் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “ மற்ற நாடுகளை போல் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் உள்ளது. அடுத்த முன்னேற்றத்திற்காக டெஸ்லாவின் எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவிற்கு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
டெஸ்லாவின் முக்கிய அமெரிக்க மற்றும் சீன சந்தைகளில் எலக்ட்ரிக் வாகனங்களின் தேவை குறைந்து வருவதால், சீன வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து தீவிரமடையும் போட்டியுடன் டெஸ்லாவின் உந்துதல் வருகிறது. டெஸ்லா ஆய்வாளரின் மதிப்பீடுகளை தவறவிட்ட முதல் காலாண்டு டெலிவரிகளில் ஒரு வீழ்ச்சியை அறிவித்தது.
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனங்களின் சந்தை சிறியது ஆனால் வளர்ந்து வருகிறது மற்றும் உள்ளூர் கார் தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் ஆதிக்கம் செலுத்துகிறது.2023-ல் மொத்த கார் விற்பனையில் எக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை வெறும் 2% மட்டுமே. அரசாங்கம் 2030-க்குள் 30% ஆக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“