Advertisment

லாட்டரி கிங் மார்டின்- தேர்தல் பத்திரம்; தி.மு.க., டி.எம்.சி.க்கு தலா ரூ.500 கோடி நன்கொடை

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அங்கு 'அன்புள்ள லாட்டரி' என்று அழைக்கப்படும் மிகவும் பிரபலமான லாட்டரி விளையாட்டுகளில் ஒன்றை விநியோகிக்கிறது.

author-image
WebDesk
New Update
Meet electoral bonds donor number 1 Santiago Martin labourer turned Lottery King

மார்டின் நிறுவனம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.542 கோடியும், தி.மு.க.வுக்கு ரூ.503 கோடியும் வழங்கியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாட்டிலேயே அதிக தேர்தல் பத்திர நன்கொடையை, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை தளமாக கொண்ட மார்டினின் ப்யூச்சர் கேமிங் நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த நிறுவனம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.542 கோடியும், தி.மு.க.வுக்கு ரூ.503 கோடியும் வழங்கியுள்ளது.

Advertisment

இதைத் தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.154 கோடியும், பாரதிய ஜனதா ரூ.100 கோடியும் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பாரத ஸ்டேட் வங்கி பகிர்ந்து கொண்ட சமீபத்திய மற்றும் இறுதித் தரவுகளில் இது தெரியவந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அங்கு 'அன்புள்ள லாட்டரி' என்று அழைக்கப்படும் மிகவும் பிரபலமான லாட்டரி விளையாட்டுகளில் ஒன்றை விநியோகிக்கிறது.

இந்த நிலையில், 'லாட்டரி கிங்' சாண்டியாகோ மார்ட்டின் மூலம், ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் ஏப்ரல் 12, 2019 முதல் ஜனவரி 24, 2024 வரை ரூ.1,368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

இந்த நிலையில், திமுக, டிஎம்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகள் நன்கொடைகளில் பெரும் பங்கை பெற்றுள்ளன, பியூச்சர் கேமிங் காங்கிரஸுக்கும் சிக்கிம் சார்ந்த கட்சிகளுக்கும் ரூ. 50 கோடி நன்கொடை அளித்துள்ளது.

ஆங்கிலத்தில் வாசிக்க : ‘Lottery king’, largest purchaser of electoral bonds, donated across party lines

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dmk trinamool congress Electoral Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment