/indian-express-tamil/media/media_files/GAFxrJe4ntK6ANIdbGvn.jpg)
செய்ஸ்தா கோச்சார் (புகைப்படம் – லிங்க்ட்இன்)
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முனைவர் பட்டம் பெற்றவரும், முன்னாள் நிதி ஆயோக் ஊழியருமான 33 வயதான செய்ஸ்தா கோச்சார், லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு சைக்கிளில் செல்லும் போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: LSE research scholar and ex-NITI Aayog employee dies in accident in London
நடத்தை மூலோபாய நிபுணரான, செய்ஸ்தா கோச்சார் 2023 செப்டம்பரில் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சேர்ந்தார். அதற்கு முன், செய்ஸ்தா கோச்சார் இந்தியாவின் தேசிய நடத்தை நுண்ணறிவுப் பிரிவில் மூத்த ஆலோசகராக நிதி ஆயோக்கிற்குப் பணிபுரிந்தார்.
நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி, அமிதாப் காந்த், வெள்ளிக்கிழமை X பக்கத்தில் செய்ஸ்தா கோச்சாருக்கு தனது இரங்கலை தெரிவித்தார். “நிதி ஆயோக்கில் லைஃப் திட்டத்தில் என்னுடன் செய்ஸ்தா கோச்சார் பணியாற்றினார். அவர் நட்ஜ் பிரிவில் இருந்தார் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் நடத்தை அறிவியலில் Ph.D செய்ய சென்றிருந்தார். லண்டனில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது பயங்கர விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் பிரகாசமான, புத்திசாலித்தனமான மற்றும் தைரியமான பெண். சீக்கிரம் போய்விட்டார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்," என்று அமிதாப் காந்த் பதிவிட்டுள்ளார்.
Cheistha Kochar worked with me on the #LIFE programme in @NITIAayog She was in the #Nudge unit and had gone to do her Ph.D in behavioural science at #LSE
— Amitabh Kant (@amitabhk87) March 23, 2024
Passed away in a terrible traffic incident while cycling in London. She was bright, brilliant & brave and always full of… pic.twitter.com/7WyyklhsTA
சிவில் சொசைட்டி மையத்தில் ஆராய்ச்சியாளராக தனது அனுபவத்தைத் தொடங்கி, செய்ஸ்தா கோச்சார் புது தில்லியில் உள்ள மெக்கின்சி மற்றும் நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினார், அதன் பிறகு அவர் இந்திய அரசாங்கத்தில் நான்கு ஆண்டுகள் வெவ்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். இறுதியில், செய்ஸ்தா கோச்சார் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் அலுவலகத்தில் ஆலோசகராக இருந்தார்.
செய்ஸ்தா கோச்சார் சிகாகோ பல்கலைக்கழகத்தில் படிக்க 2016 இல் அமெரிக்காவின் சிகாகோவுக்குச் சென்றார், அங்கு அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்தார். 2021 இல், செய்ஸ்தா கோச்சார் புது தில்லிக்குத் திரும்பினார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கார் விபத்தில் 24 வயது இந்திய தொழில் நிபுணரான அர்ஷியா ஜோஷி உயிரிழந்த ஒரு நாள் கழித்து இந்த செய்தி வந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.