Advertisment

இங்கு புல்டோசர் அரசியல் பாஜகவுக்கு உதவாது.. உயர் மட்டத்துக்கு புத்தி சொல்லும் ம.பி. தலைவர்கள்

நல்ல சட்டம் மற்றும் ஒழுங்கு வைத்திருப்பதில் ஆதித்யநாத்தின் துணிச்சலான இமேஜ் மீண்டும் கட்சி ஆட்சிக்கு வர உதவியது என்று பாஜக மதிப்பிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Madhya pradesh election

Bulldozer doesn’t work for BJP in Madhya Pradesh, state leaders tell top brass

Madhya pradesh election | புல்டோசர்கள் உத்தரபிரதேசத்தில் பாஜகவின் தேர்தல் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக மாறியிருக்கலாம், ஆனால் தேர்தல் நடைபெறும் மத்தியப் பிரதேசத்தில் அது கட்சிக்கு உதவாது என்று மாநிலக் கட்சித் தலைவர்களில் ஒரு பகுதியினர் தேசியத் தலைமையிடம் கூறியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

இந்த புல்டோசர் அரசியல், மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் தலித் வாக்குகளை ஒருங்கிணைக்கும் இலக்கை அடைவதற்கு மாநில அரசின் நடவடிக்கைக்கு தடையாக உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷுடனான சமீபத்திய சந்திப்பில், 2003 முதல் மாநிலத்தில் பாஜகவின் 15 ஆண்டு கால இடையூறு இல்லாத ஆட்சிக்கு உதவிய இரண்டு குறிப்பிடத்தக்க வாக்காளர்களான எஸ்சி மற்றும் எஸ்டி மக்களிடையே ஆதரவுத் தளத்தை மீண்டும் பெறுவதற்கான அதன் முயற்சிகளின் முடிவை மதிப்பீடு செய்ததில், ஒரு பகுதி தலைவர்கள் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியதாக கட்சியின் மாநில பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க புல்டோசர்களைப் பயன்படுத்தியதற்காக பாராட்டுகளை பெற்றதைத் தொடர்ந்து, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானும், கல் வீசுபவர்களின் வீடுகளையும் சொத்துக்களையும் இடிக்க புல்டோசர்களை அனுமதித்தார்.

இந்த நடவடிக்கை, யோகி ஆதித்யநாத்தின் "புல்டோசர் பாபா" வரிசையில் "புல்டோசர் மாமா" என்ற பிம்பத்தை சௌஹானுக்கு பெற்றுத்தந்தது. ஆதித்யநாத்தின் "ஒரு நல்ல சட்டம் மற்றும் ஒழுங்கு வைத்திருப்பதில் துணிச்சலான இமேஜ்" மீண்டும் கட்சி ஆட்சிக்கு வர உதவியது என்று பாஜக மதிப்பிட்டுள்ளது.

இருப்பினும், மக்கள்தொகையில் 90 சதவீதத்துக்கும் அதிகமான இந்துக்கள் மற்றும் ஏழு சதவீத முஸ்லிம்கள் இருக்கும் மத்திய பிரதேசத்தில் , “புல்டோசர்” அரசியல் வேலை செய்யாது என்று கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். மாநிலத்தில் இந்து-முஸ்லீம் அரசியல் ஒரு பிரச்சினையாக இல்லை, ஆனால் சாதி அரசியல் இங்கே மிகவும் ஆழமாக செயல்படுகிறது, என்று ஒரு பாஜக தலைவர் கூறினார்.

கார்கோன் வகுப்புவாத மோதல்களுக்குப் பிறகு அதிகாரிகள் 49 முஸ்லீம் வீடுகளை இடித்தார்கள், அவற்றில் சில பிரதமர் ஆவாஸ் யோஜனாவின் கீழ் கட்டப்பட்டது. இச்சம்பவம் பல SC/ST அமைப்புகள் தங்கள் சமூகங்களுக்கு ஆதரவாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தன.

சிறிய பழங்குடியினர் மற்றும் தலித் அமைப்புகளிடையே பரவலான அதிருப்தி இரு சமூகங்களையும் மீண்டும் தனது கட்டுக்குள் இழுக்கும் பாஜகவின் முயற்சிகளை சீர்குலைத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment