Advertisment

மகாராஷ்டிரா அரசின் பள்ளி பாடத் திட்டத்தில் மனுஸ்மிருதி குறிப்பு? கல்வி அமைச்சர் விளக்கம்

மகாராஷ்டிரா அரசின் பள்ளி பாடத் திட்டத்தில் மனுஸ்மிருதிக் குறிப்பு இடம் பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Deepak Kesarkar.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமீபத்தில் முன்மொழியப்பட்ட மகாராஷ்டிர மாநில பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டத்தின் அனைத்து பரிந்துரைகளையும் மகாராஷ்டிர அரசு தொடராது என்று மாநில கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார்.

Advertisment

முன்மொழியப்பட்ட பாடத் திட்ட  வரைவில் உள்ள அத்தியாயங்களில் ஒன்றில் மனுஸ்மிருதியின் வரிகளை மேற்கோளாகப் பயன்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் திட்ட வரைவு வெளியிடும் முன் கமிட்டி இதுகுறித்து அரசாங்க ஒப்புதலைப் பெறவில்லை என்று கூறினார். 

மும்பையில் வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேசர்கர், மராத்தியை கட்டாய மொழியாக நீக்கியதற்கு வருத்தம் தெரிவித்தார். "சரியான நடைமுறையைப் பின்பற்றாமல் வரைவு வெளியிடப்பட்டதால் இது நடந்தது," என்று அவர் கூறினார்.

11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலத்தை கட்டாய மொழியில் இருந்து நீக்கியதற்கு விளக்கம் அளித்த அவர் "தொழில்நுட்பக் கல்வி உட்பட பிராந்திய மொழிகளில் உயர்கல்வியை வழங்க அரசாங்கம் செயல்பட்டு வருவதால் இது நீக்கப்பட்து" என்றும் கேசர்கர் கூறினார்.

அமைச்சரின் விளக்கத்திற்குப் பிறகு, SCERT திங்கள்கிழமை பிற்பகுதியில் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது, 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கில மொழி கட்டாயமாகும். மேலும் 6 ஆம் வகுப்பிலிருந்து இந்தி, சமஸ்கிருதம் மற்றும் பிற இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகள் வழங்கப்படும் என்றும் அது தெளிவுபடுத்தியது. 11 மற்றும் 12 மாணவர்கள் இரண்டு மொழிகளைக் கற்க வேண்டும் - ஒன்று இந்திய மொழி மற்றொன்று வெளிநாட்டு மொழியாகும். 

கடந்த வாரம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய மகாராஷ்டிரா மாநில பாடத்திட்ட கட்டமைப்பை (SCF) வெளியிட்டது, இது இந்திய அறிவு அமைப்பை (IKS) பள்ளிக் கல்வியில் (SE) ஒருங்கிணைப்பதை பரிந்துரைக்கிறது. இது பகவத் கீதை மற்றும் மனச்சே ஸ்லோக் போன்ற நூல்களை உள்ளடக்கியது - சமர்த் ராம்தாஸ் சுவாமியின் இசையமைப்பு - பாராயணம் போட்டிகள் மூலம் மனப்பாடம் மேம்படுத்துவதற்காக.

SCF இலிருந்து "மதிப்புக் கல்வி மற்றும் மனப்பான்மை" பற்றிய ஒரு அத்தியாயம், மாணவர்களுக்கான குணநலன்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது, இது சமூக அமைப்பை விவரிக்கும் பண்டைய இந்து சட்ட நூலான மனுஸ்மிருதியிலிருந்து சமஸ்கிருத வசனத்துடன் தொடங்கியது சர்ச்சையைத் தூண்டியது. இந்தச் சேர்க்கை முடிவின் பின்னணியில் உள்ள உள்நோக்கம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனத்தை ஏற்படுத்தியது. 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/mumbai/school-curriculum-maharashtra-govt-scraps-manusmriti-reference-from-draft-9355596/

கேசர்கர் இந்த பிரச்சினையை எடுத்துரைத்தார், “மாநில அரசின் அனுமதியின்றி வரைவை பொதுக் களத்தில் வைத்தது வழிநடத்தல் குழுவின் ஒரு பிழை. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். நான் தெளிவுபடுத்துகிறேன், அரசாங்கம் எந்த உரையையும் பிரச்சாரம் செய்ய விரும்பவில்லை, பாடப் புத்தகங்களில் இவை எதையும் சேர்க்காது.

3 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான மொழிக் கொள்கையில் தெளிவு இல்லை; 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு, ஆங்கிலம் வெளிநாட்டு மொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிர கேபினட் மந்திரி சாகன் புஜ்பலும் மனுஸ்மிருதி குறிப்பு குறித்து கவலை தெரிவித்தார், அவர் கூறுகையில், மனுஸ்மிருதியை பாடத்திட்டத்தில் சேர்ப்பது தலித்துகள் மற்றும் ஓபிசிகள் மத்தியில் தவறான சமிக்ஞையை அனுப்பக்கூடும் என்றார். 

“அத்தகைய செயல்கள் எங்களுக்கு  தேர்தலிலும் பாதிக்கலாம். இந்த முயற்சி நிறுத்தப்பட வேண்டும். இப்போது அற்பமானதாகத் தோன்றினாலும், அது எதிர்காலச் சவால்களை முன்வைக்கலாம்,” என்று புஜ்பால் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment