/indian-express-tamil/media/media_files/2025/10/28/tejashwi-22-2025-10-28-22-09-19.jpg)
பாட்னாவில் மகாகத்பந்தன் கூட்டணி கட்சிகள் பீகார் தேர்தல் அறிக்கை - ‘பிஹார் கா தேஜஸ்வி பிரான்’- வெளியிடும் போது ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ். Photograph: (Express Photo by Chitral Khambhati)
பீகாரில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் மகாகட்பந்தன் கூட்டணி தனது தேர்தல் கூட்டறிக்கையைச் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில், அரசு வேலைகள் மற்றும் பெண்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி ஆகியவை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியின் தலைமை மற்றும் வாக்குறுதிகள்:
முதலமைச்சர் வேட்பாளர்: ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்.ஜே.டி) தலைவர் தேஜஸ்வி யாதவ் மகாகட்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
துணை முதலமைச்சர் வேட்பாளர்: விகாஷீல் இன்சான் கட்சிக்குத் (வி.ஐ.பி) தலைமை தாங்கும் முகேஷ் சஹானி துணை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கையின் (தேஜஸ்வி பிரான் பத்ரா) முக்கிய அம்சங்கள் (25 முக்கியக் அறிவிப்புகளில் சில):
1.குடும்பத்திற்கு ஒரு வேலை: ஆட்சி அமைத்த 20 நாட்களுக்குள், ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவருக்கு வேலை உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டு வரப்படும்.
2.இலவச மின்சாரம்: 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
3.மகளிருக்கு நிதி உதவி: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதி உதவியும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு ரூ.30,000 வழங்கப்படும்.
4.பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme): பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
பிற முக்கிய உறுதிமொழிகள்:
5.பணியமர்த்தல்: ஆட்சி அமைத்த 20 மாதங்களுக்குள் வேலைவாய்ப்பு வழங்கும் செயல்முறை தொடங்கப்படும்.
6.ஒப்பந்த ஊழியர்கள்: அனைத்து ஒப்பந்த அல்லது வெளிமுகமை ஊழியர்களும் நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள்.
7.‘சி.எம்’ சகோதரிகளுக்கு' ஊதியம்: அனைத்து கம்யூனிட்டி மொபைலைசர் (Community Mobiliser - CM) 'சகோதரிகள்' பணி நிரந்தரமாக்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000 வழங்கப்படும். அவர்கள் வாங்கிய கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் மற்றும் 2 ஆண்டுகளுக்கு வட்டி வசூலிக்கப்படாது.
8,.மகளிர் நலத் திட்டங்கள்: மகள்களுக்கு "நன்மைகள்", "கல்வி", "பயிற்சி" மற்றும் "வருமானம்" ஆகியவற்றை உறுதிப்படுத்த பேட்டி திட்டமும், தாய்மார்களுக்கு "வீடு", "உணவு" மற்றும் "வருமானம்" ஆகியவற்றை உறுதிப்படுத்த மாய் (MAI) திட்டமும் கொண்டு வரப்படும்.
9.பொருளாதார வளர்ச்சி: ஐ.டி பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பால் சார்ந்த தொழில்கள், வேளாண்மை சார்ந்த தொழில்கள், சுகாதார சேவைகள், உணவுப் பதப்படுத்துதல், சுற்றுலா போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
10.உள்கட்டமைப்பு: பீகாரில் 2000 ஏக்கரில் கல்வி நகரம், தொழில் தொகுப்புகள் மற்றும் ஐந்து புதிய விரைவுச் சாலைகள் கட்டப்படும். மீன் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
11.முந்தைய தகவல்: ஓ.பி.சி மாணவர்களுக்கான ஒவ்வொரு துணைப் பிரிவிலும் விடுதிகளும், ஒவ்வொரு வட்டாரத்திலும் பட்டப்படிப்புக் கல்லூரிகளும் இடம்பெறும் என்று முன்னர் தகவல் வெளியானது.
12.பந்திபாத்யாய் கமிஷன்: நிலச் சீர்திருத்தங்கள் குறித்த பந்திபாத்யாய் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆளும் என்.டி.ஏ கூட்டணி:
இதற்கிடையில், பீகாரில் ஆளும் என்.டி.ஏ கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை அக்டோபர் 30-ம் தேதி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us