Advertisment

'அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது': சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில்

“எங்களின் பிரதேசங்கள் என்ன என்பது எங்களுக்கு மிகவும் தெளிவாக உள்ளது. அதே நேரத்தில், எமது பிரதேசங்களை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் இந்த அரசாங்கம் மிகவும் தெளிவாக உள்ளது” என ஜெய்சங்கர் கூறினார்.

author-image
WebDesk
New Update
Making absurd claims doesnt make other peoples territories yours Jaishankar on China map with Arunachal Aksai Chin

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர்

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் மீது உரிமை கோரும் வரைபடத்தை சீனா செவ்வாய்க்கிழமை (ஆக.22) வெளியிட்டது.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், “பிராந்தியங்கள் மீது அபத்தமான உரிமைகோரல்களை வெளியிடுவது ஆகாது” என்றார்.

Advertisment

இது தொடர்பாக, என்.டி.டி.வி (NDTV) டிகோட்ஸ் G20 மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “இதுபோன்ற வரைபடங்களை வெளியிடுவது சீனாவின் பழைய பழக்கம். கடந்த காலங்களில் சீனாவின் பிரதேசங்கள் மற்ற நாடுகளுக்கு சொந்தமானவை என்று உரிமை கோரும் வரைபடங்களை வெளியிட்டது.

இது அவர்களின் பழைய பழக்கம். இது ஒன்றும் புதிதல்ல. இது 1950களில் தொடங்கியது. எங்களின் பிரதேசங்கள் என்ன என்பது எங்களுக்கு மிகவும் தெளிவாக உள்ளது.

எமது பிரதேசங்களை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் இந்த அரசாங்கம் மிகவும் தெளிவாக உள்ளது. நீங்கள் அதை ஏற்கனவே எல்லைகளில் பார்க்க முடியும்.

இதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். அபத்தமான உரிமைகோரல்களைச் செய்வது மற்றவர்களின் பிரதேசங்களை உங்களுடையதாக ஆக்காது" என்றார்.

சீனா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் தேசிய எல்லைகளை வரைதல் முறையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட அதன் "நிலையான வரைபடத்தின்" 2023 பதிப்பை சீனா வெளியிட்டது.

குளோபல் டைம்ஸ் காட்சிப்படுத்திய இந்த வரைபடத்தில், தென் திபெத் என்று சீனா உரிமை கோரும் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் 1962 போரில் அக்சாய் சின் ஆகியவற்றை இந்தியா ஆக்கிரமித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மேலும், “சீனா தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கூறும் தைவானையும், தென் சீனக் கடலின் பெரும்பகுதியைக் கோரும் ஒன்பது பகுதிகளையும் இந்த வரைபடத்தில் இணைத்துள்ளது” என பி.டி.ஐ செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அருணாச்சலப் பிரதேசத்திற்கான மூன்றாவது பெயர்களை சீன, திபெத்திய மற்றும் பின்யின் எழுத்துக்களில் வெளியிட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும்” என்றார்.

‘இராஜதந்திர வழிகளில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளேன்’

மேலும், சீனாவின் "நிலையான வரைபடம்" குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “சீன தரப்பிற்கு இராஜதந்திர வழிகள் மூலம் நாங்கள் வலுவான எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்” என்றார்.

தொடர்ந்து, “இந்த கூற்றுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதால் நாங்கள் நிராகரிக்கிறோம். சீனத் தரப்பின் இத்தகைய நடவடிக்கைகள் எல்லைப் பிரச்சினையின் தீர்வை சிக்கலாக்குகின்றன” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

China Arunachal Pradesh India China War S Jaishankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment