Advertisment

அம்பேத்கரை மதிக்கிறார் என்றால்... மோடி நள்ளிரவில் அமித்ஷாவை நீக்க வேண்டும்: கார்கே காட்டம்

பிரதமர் மோடி, “காங்கிரஸின் அழுகிய சூழல் மற்றும் அதன் தீங்கிழைக்கும் பொய்களால் அதன் தவறான செயல்களை மறைக்க முடியாது” என்று கூறினார். அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸின் செயல்களையும் பிரதமர் மோடி பட்டியலிட்டார்.

author-image
WebDesk
New Update
protest against Amit Shah

அமித்ஷா அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது இந்த நாட்களில் ஒரு புதிய ஃபேஷன் என்று கூறினார், மேலும், அவருக்கு எதிராக காங்கிரஸின் "அநீதிகளை" பட்டியலிட்டார். (Express File)

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க அரசு மீது கடும் கோபத்தை எழுப்பிய காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின் போது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறித்து பேசியதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை நள்ளிரவுக்கு முன் பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: PM Modi should sack Amit Shah by midnight if he respects Ambedkar: Mallikarjun Kharge

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். மோடிக்கு அரசியல் சாசனத்தின் மீது மரியாதை இருந்தால் நள்ளிரவு 12 மணிக்குள் அவரை நீக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அப்போதுதான், மக்கள் அமைதியாக இருப்பார்கள்... இல்லையெனில், பாபாசாகேப்புக்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் இருக்கிறார்கள். சாதி என்ற கேள்வியே இல்லை. அம்பேத்கர் அனைவருக்குமானவர்”. என்று கூறினார்.

நான் பிரதமரிடம் கூறுகிறேன், உங்களிடம் பாபாசாகேப்புக்கான இடம் இருந்தால், அமித்ஷாவை உடனடியாக நீக்குங்கள். இல்லை என்றால், அம்பேத்கர் பற்றி நீங்கள் சொல்வது எல்லாம் நாடகம். எங்களின் முதல் கோரிக்கை அமித்ஷாவை நீக்க வேண்டும், இரண்டாவது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், மோடி அவரை நீக்க வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.

Advertisment
Advertisement

செவ்வாய்க்கிழமை ராஜ்யசபாவில் தனது உரையின் போது அம்பேத்கரை அவமதித்ததாக அமித்ஷாவை குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகளை பிரதமர் விமர்சித்ததை அடுத்து,  “காங்கிரஸின் அழுகிய சூழல் அமைப்பு மற்றும் அதன் தீங்கிழைக்கும் பொய்கள் அதன் தவறான செயல்களை மறைக்க முடியாது” என்று  கூறியதை அடுத்து கார்கேவின் கருத்துக்கள் வந்துள்ளன. எக்ஸ் தளப் பதிவில், பிரதமர் மோடி அம்பேத்கருக்கு எதிரான “காங்கிரஸின் அநீதிகளை” பட்டியலிட்டார்.

அமித்ஷா செவ்வாய் மாலை தனது உரையில், அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது இந்த நாட்களில் ஒரு புதிய ஃபேஷன் என்று கூறினார், மேலும், அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸின் "அநீதிகளை" பட்டியலிட்டார்.

அமித்ஷாவின் பேச்சைக் குறிப்பிட்டு பேசிய கார்கே, “நேற்று, நமது அமித் ஷா கண்டனத்திற்குரிய ஒன்றைக் கூறினார். இது துரதிர்ஷ்டவசமானது... எதிர்க்கட்சிகளைப் பார்த்து கிண்டல் செய்தார்... இவ்வளவு முறை கடவுளின் பெயரைக் கூறியிருந்தால், ஏழு ஜென்மத்திற்கு சொர்க்கம் கிடைத்திருக்கும்”  என்றார்.

“அரசியலமைப்புச் சட்டத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. சொர்க்கம் மற்றும் நரகத்தைப் பற்றி அவர்கள் பேசும்போது, ​​அது மனுஸ்மிருதியில் இருந்து... இது அவர்களின் சிந்தனை. அவர்களின் சித்தாந்தவாதிகளும் இதையே சொன்னார்கள். இது பள்ளிக் கல்வி போன்றது, அவர்கள் அதை பின்பற்றுகிறார்கள். டாக்டர் அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்ததாகவும் சொல்கிறார்கள். அவர்கள் நேரு மற்றும் காந்தி குடும்பத்தை எப்படி இழிவுபடுத்த முயன்றனர் என்று நான் சபையில் கூறியுள்ளேன்” என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், "மோடி அவரை(அமித்ஷா) கேள்வி கேட்டு, இது சரியல்ல என்று கூறுவதற்குப் பதிலாக, சமூக ஊடகங்களில் தொடர்ச்சியான பதிவுகள் மூலம் அவரைப் பாதுகாத்து வருகிறார்” என்று கூறினார். மேலும்,  “அவர் ஏன் அவ்வாறு கூறினார்..." "என்ன தேவை? பாபாசாகேப் பற்றி யாராவது தவறாகப் பேசினால், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். அவர்கள் ஆழ்ந்த நண்பர்கள். அவர்களில் ஒருவர் அநீதி இழைத்தால், மற்றவர் ஆதரிக்கிறார். நீங்கள் சொல்லும் அரசியலமைப்பு புனிதமானது என்பதை மோடியிடமிருந்து நான் அறிய விரும்புகிறேன். அவர்கள் ஒருபோதும் அரசியலமைப்பை மதிக்கவில்லை” என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Malligarjun Kharge
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment