New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/01/bengaluru-man-slams-son-650_650x400_41517070962.jpg)
10 வயது மகனை சரமாரியாக அடித்து துன்புறுத்திய தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர். அச்சிறுவனை அவர் தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் 10 வயது மகனை சரமாரியாக அடித்து துன்புறுத்திய தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர். அச்சிறுவனை அவர் தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, காவல் துறையினர் தரப்பில் கூறியதாவது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பொய் சொல்லியதாக கூறி 10 வயது மகனை, அவனது தந்தை சரமாரியாக தாக்கியுள்ளார். அச்சிறுவனை தூக்கி கட்டிலில் வீழ்த்தி தன் காலால் எட்டி உதைக்கிறார். இதனால், வலியால் துடித்த அச்சிறுவன், தன்னை விட்டுவிடுமாறு அழுதுகொண்டே கெஞ்சுகிறான். இச்சம்பவத்தினை அச்சிறுவனின் தாயாரே தன் மொபைலில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.
இச்சம்பவம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். அச்சிறுவனின் தாயார் தன் மொபைலை சரிசெய்வதற்காக, கடையொன்றில் கொடுத்தபோது அந்த வீடியோவை கடைக்காரர்கள் பார்த்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அச்சிறுவனின் தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.