மணிப்பூர் அனைத்துக் கட்சி கூட்டம்: பிரதமர் மோடி கலந்துகொள்வாரா? காங்கிரஸ் கேள்வி

மணிப்பூர் வன்முறை தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வாரா என காங்கிரஸ் கேள்வியெழுப்பி உள்ளது.

மணிப்பூர் வன்முறை தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வாரா என காங்கிரஸ் கேள்வியெழுப்பி உள்ளது.

author-image
WebDesk
New Update
Manipur all-party meet Cong questions PM Modis absence CPM says removing CM should be the first step

மணிப்பூரில் இரு குழுக்கள் இடையே முதல்கட்ட வன்முறை மே 3,5ஆம் தேதிகளில் நடந்தது.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 24ஆம் தேதி சனிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், இது மிகவும் சிறிய நடவடிக்கை மற்றும் தாமதமானது, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுவிட்டார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
மேலும், இதுபோன்ற முக்கியமான கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளாதது அவரது கோழைத்தனத்தையும், தோல்விகளை எதிர்கொள்ள விருப்பமின்மையையும் காட்டுகிறது எனவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இதற்கிடையில் மணிப்பூர் முதலமைச்சர் பைரோன் சிங்கை நீக்குவது முதல் நடவடிக்கையாக இருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் அறிக்கையில், “மாநில அரசாங்கம் சீர்குலைந்த நிலையில், தெளிவான அதிகார வரம்பு நிறுவப்படாத நிலையில், முதல் படி அவசியமானது.
அதுதான் பைரேன் சிங் அரசாங்கத்தை அகற்றுவது. அவ்வாறானதொரு நடவடிக்கையின்றி வடகிழக்கில் ஆளும் கட்சியின் குறுகிய மதவாத அரசியலால் ஏற்பட்டுள்ள குழப்பத்திலிருந்து மீள முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால், “அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சரின் அழைப்பு மிகவும் தாமதமானது. மணிப்பூர் மக்களிடம் சோனியா காந்தி ஆற்றிய உரைக்குப் பிறகுதான் அரசாங்கம் விழித்துக் கொண்டது” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

தொடர்ந்து, “ஆரம்பத்தில், இதுபோன்ற தீவிரமான சந்திப்பில் பிரதமர் கலந்து கொள்ளாதது அவரது கோழைத்தனத்தையும், தோல்விகளை எதிர்கொள்ள விருப்பமின்மையையும் காட்டுகிறது.
பல பிரதிநிதிகள் அவரைச் சந்திக்க முயன்றபோதும், அவர் அவர்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை. உள்துறை அமைச்சரே இந்த நிலைமைக்கு தலைமை தாங்கினார்.

இதில், எந்த முன்னேற்றமும் செய்யவில்லை, உண்மையில், அவரது வருகைக்குப் பிறகு விஷயங்கள் மோசமாகிவிட்டன. அவருடைய தலைமையின் கீழ் உண்மையான அமைதியை எதிர்பார்க்க முடியுமா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், “பாகுபாடான மாநில அரசு தொடர்வதும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தாததும் ஓர் கேலிக்கூத்து” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், “கடந்த 50 நாட்களாக மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது ஆனால் பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

தொடர்ந்து, “பிரதமர் நாட்டில் இல்லாத போது அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பு பிரதமருக்கு முக்கியமில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றார்.

மே 3 முதல் 5 வரை சமவெளியில் வசிக்கும் மெய்தே சமூகத்திற்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே பெரிய அளவிலான மோதல்கள் மணிப்பூரில் முதன்முதலில் பதிவாகின.
இந்த மோதல்களில் 110 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Manipur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: