மணிப்பூர் ஜிரிபாமில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை; 11 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
manipur-encounter x

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் திங்கள்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. (File)

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: 11 ‘militants’ killed in gunfight with security forces in Manipur’s Jiribam, say officials

போரோபெக்ரா சப்-டிவிஷனில் உள்ள ஜகுரடோர் கரோங்கில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (சி.ஆர்.பி.எஃப்) சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர். அதிகாரிகளில் ஒருவரின் நிலைமை "ஆபத்தான நிலையில்" இருப்பதாக ன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, இன்று காலை ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் அப்பகுதியில் உள்ள பல கடைகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சில வீடுகள் மற்றும் சி.ஆர்.பி.எஃப் முகாம் மீதும் தாக்குதல் நடத்தினர். இது துப்பாக்கிச் சண்டைக்கு வழிவகுத்தது.

Advertisment
Advertisements

கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்கள் போரோபெக்ரா காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு சில பொதுமக்கள் இன்னும் "காணவில்லை" என்றும், அவர்கள் பின்வாங்கும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்களா அல்லது தாக்குதல் தொடங்கிய பிறகு தலைமறைவாக இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Manipur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: