அரசியலில் இன்று: நாடாளுமன்றத்தை உலுக்கும் மணிப்பூர் விவகாரம்; என்.டி.ஏ எம்.பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வர உள்ளது.

மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வர உள்ளது.

author-image
WebDesk
New Update
Opposition MPs protest

Opposition MPs protest in the Lok Sabha during the Monsoon session of Parliament, in New Delhi, July 28, 2023. (PTI)

மணிப்பூர் விவகாரத்தில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, மாநில பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி குழு மணிப்பூர் சென்று வந்தது. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு செயல்களை முடக்குவதாக மத்திய பா.ஜ.க அரசு குற்றஞ்சாட்டுகிறது.

Advertisment

மணிப்பூருக்குச் சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு, இந்தியா கூட்டணியில் உள்ள 26 கட்சிகளின் தலைவர்களிடம் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) ராஜ்யசபா எம்.பி., மனோஜ் குமார் ஜா கூறுகையில், மோதல் தீர்வுக்கான முதல் படி, சிக்கல் இருப்பதை ஒப்புக்கொள்வது என்றார். “இதை ஒப்புக்கொள்ளத் தவறியதே மத்திய அரசின் பிரச்சனை. அதற்கு சான்றாக, பிரதமர் மௌனம் சாதித்து, வெளிப்படையாக மௌனம் சாதித்ததே" என்றார்.

மேலும், பிரதமர் டெல்லியிலும் மணிப்பூரிலும் எதிர்க்கட்சிகளை நம்பி ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க வேண்டும். அவர் ஒப்புக்கொண்டு சில வேலைகளைச் செய்ய வேண்டும். தற்போதைய முதல்வர் பிரச்சனையின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறார். எனவே, அவர் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்றார்.

மணிப்பூர் விவகாரம் மேற்கு வங்க சட்டப்பேரவையும் உலுக்குகிறது. திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) மாநிலத்தில் வன்முறை குறித்து ஒரு தீர்மானத்தை முன்வைக்கிறது. கடந்த வாரம் மழைக்கால கூட்டத்தொடருக்காக சட்டசபை கூடியபோது, ​​“வடகிழக்கு மாநிலம் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடி” குறித்து சபை விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டிஎம்சியின் தலைமை கொறடா நிர்மல் கோஷ் கூறினார். மணிப்பூர் குறித்து சட்டசபையில் விவாதம் நடத்தினால் அதை எதிர்ப்போம் என்று பா.ஜ.க அப்போது கூறியது.

Advertisment
Advertisements

இதனிடையே, இன்று முதல் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எம்.பி.க்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் மற்றும் அதன் கூட்டணியை வலுப்படுத்தும் பா.ஜ,கவின் முயற்சிகளின் வெளிச்சத்தில் டெல்லியில் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சட்டமன்ற உறுப்பினர்கள் 11 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில், பிரதமருடனான சந்திப்பு ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Manipur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: