Advertisment

மணிப்பூர் கலவரம்; குக்கி-பைடேய் பழங்குடியினர் முதல்வரை எதிர்க்க என்ன காரணம்?

இந்திய வனச் சட்டம், 1927, மணிப்பூருக்கு தானாகப் பொருந்தாது, ஏனெனில் அது அரசியலமைப்பின் கீழ் ஒரு ‘சி’ மாநிலமாகும், மேலும் இந்தச் சட்டம் முதலில் சட்டமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manipur

Manipur flashpoint

மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமான மெய்தி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பழங்குடியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

மெய்தி சமுகத்திற்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் வன்முறை வெடித்தது.

இதற்கிடையே, மணிப்பூரில் வன்முறை வெடிக்கும் முன்பே, பாஜக மத்திய தலைமையை சந்திப்பதற்காக குக்கி எம்எல்ஏக்கள் குழு செவ்வாய்க்கிழமை புது தில்லி வந்தது.

கட்சியின் மாநிலத் தலைமை மாற்றம், குறிப்பாக முதல்வர் என் பிரேன் பதவியில் இருந்து விலக்க அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சைகோட் எம்.எல்.ஏ பாவ்லியன்லால் ஹொக்கிப், கடந்த சில ஆண்டுகளாக மாநில நிர்வாகம் மணிப்பூர் சமூகங்களை ஓரங்கட்டியதாக கூறினார். சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள காப்புக் காடுகளில் இருந்து கிராம மக்கள் சமீபத்தில் வெளியேற்றப்பட்டனர்.

ST அந்தஸ்துக்கான மெய்தி சமூகத்தின் கோரிக்கையை எதிர்த்து, பழங்குடியினர் அமைப்புகள் புதன்கிழமை நடத்திய அணிவகுப்பு, பெரும்பான்மை சமூகத்திற்கும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே ஒரு மோதலாக உள்ளது. இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உள்ளது.

60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் மெய்தி சமூகம், 40 பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது.

குக்கி தலைவர்கள் இந்த கோரிக்கையை முழு மாநிலத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான மெய்தி சமூகத்தின் மற்றொரு முயற்சியாக கூறுகின்றனர்.  

ஹொக்கிப் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் வியாழனன்று கூறுகையில், வெளியேற்றும் பிரச்சினை என்பது வெறுமனே கடைசி கட்டம்தான் என்று கூறினார் - கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த தொடர்ச்சியான நிகழ்வுகளில், இது சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள குக்கி-பைடேய்-ஜோமி சமூகத்தை கோபப்படுத்தியுள்ளது.

மெய்தி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் இம்பால் பள்ளத்தாக்கிலும் இதேபோன்ற வெளியேற்ற நடவடிக்கைகள் நடந்ததாக மாநில அரசு கூறியுள்ளது.

publive-image

மே 4, 2023, வியாழன், இம்பாலில் ‘பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு’ போது வன்முறையைத் தொடர்ந்து வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. (PTI புகைப்படம்)

இதுகுறித்து ஹாக்கிப் மேலும் கூறுகையில், காடுகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது என்ற பெயரில் குக்கி சமூகத்தை குறிவைக்கிறது. இந்திய வனச் சட்டம், 1927, மணிப்பூருக்கு தானாகப் பொருந்தாது, ஏனெனில் அது அரசியலமைப்பின் கீழ் ஒரு ‘சி’ மாநிலமாகும், மேலும் இந்தச் சட்டம் முதலில் சட்டமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

காடுகளை பாதுகாக்கப்பட்டதாக அறிவிப்பதற்கான நடைமுறைத் தேவை உள்ளது, ஆனால் ஏற்கனவே உள்ள கிராமங்களுக்கு அத்தகைய அறிவிப்பு கொடுக்கப்பட்டதாக எந்த பதிவும் இல்லை.

1970களில் 38 கிராமத் தலைவர்களின் நிலம் வனக் குடியேற்ற அதிகாரியால் பாதுகாக்கப்பட்ட காடுகளிலிருந்து விலக்கப்பட்டது. கடந்த நவம்பரில், முதல்வர் தன்னிச்சையாக இந்த உத்தரவை ரத்து செய்தார்.

சுராசந்த்பூரில் உள்ள கோபம் பாஜகவுக்கு எதிரானது அல்ல, முதல்வருக்கு எதிரானது என்று அவர் கூறினார்

மியான்மரில் இருந்து மணிப்பூரில் குடியேறிய சுராசந்த்பூர் சமூகத்தை "வெளிநாட்டினர்" மற்றும் "வெளியாட்கள்" என்று பிரேன் பலமுறை குறிப்பிட்டு வருவதை ஹாக்கிப் உள்ளிட்ட குக்கி தலைவர்கள் சுட்டிக்காட்டினர். குக்கி-சோமி பழங்குடியினர் மியான்மரில் உள்ள குகி-சின் மலைகளில் இருந்து வந்தவர்கள்.

publive-image

பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே புதன்கிழமை வன்முறை வெடித்ததை அடுத்து தீ விபத்து நடந்த இடத்தில் மக்கள் (PTI)

மணிப்பூரில் மருந்துகள் தயாரிப்பதற்காக பரவலாக உள்ள, கசகசா சாகுபடிக்கு எதிரான பீரனின் இயக்கம், குக்கி சமூகத்தை குறிவைத்துள்ளது என்று சமூகத் தலைவர்கள் தெரிவித்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், சுராசந்த்பூரில் இருந்து 16 கிலோ அபின் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த செய்தி அறிக்கையை, பீரனின் செய்தியுடன் பகிர்ந்துள்ளது. கசகசாவை பயிரிடுவதற்காக நமது இயற்கையான காடுகளை அழித்து போதைப்பொருள் கடத்தல் தொழிலை மேற்கொள்வதற்காக வகுப்புவாத பிரச்சனைகளை மேலும் தூண்டிவிடுகிறார்கள்.

publive-image

இம்பால்: மே 4, 2023 வியாழன் அன்று இம்பாலில் நடந்த ‘பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பின்’ போது வன்முறை வெடித்ததால் தீ வைத்து  எரிக்கப்பட்ட கட்டிடத்தில் வெளியேறும் புகை. (PTI புகைப்படம்)

ஏப்ரல் 11 அன்று, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியினர் காலனியில் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மாநில அரசாங்கத்தால் மூன்று அங்கீகரிக்கப்படாத தேவாலயங்கள் இடிக்கப்பட்டன. இது பெரும்பாலும் குக்கி சமூகம் வசிக்கும் ஒரு காலனி ஆகும்.

மெய்தி சமூகத்தின் ST அந்தஸ்து கோரிக்கையால் பழங்குடி சமூகங்களிடையே "அச்சுறுத்தல் உணர்வு" இருப்பதாகக் கூறும் ஹொக்கிப், வெளியேற்றங்கள் மூலம் அவர்கள் பழங்குடியினரின் நிலத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறார்களோ என்ற அச்சம் உள்ளதாக கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment