New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Manipur-3.jpg)
Tamil News live
மணிப்பூர் வன்கொடுமை வீடியோவை படம் பிடித்தவர் கைது செய்யப்பட்டார். படம் பிடித்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
Tamil News live
மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வீடியோவை பதிவு செய்ததாகக் கூறப்படும் நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் வீடியோ பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் பெறப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் உரிய நடைமுறையை உறுதி செய்வதற்காக மாநிலத்திற்கு வெளியே, அஸ்ஸாமில் விசாரணை நடைபெறலாம் எனத் தெரியவருகிறது.
மேலும், மெய்தி (Meitei) மற்றும் குகி (Kuki) ஆகிய இரு சமூகத்தினரையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் "மேம்பட்ட" கட்டத்தில் இருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் திட்டமிடப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஒவ்வொரு சமூகத்துடனும் ஆறு என மொத்தம் 12 சுற்று பேச்சுவார்த்தைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.