New Update
/indian-express-tamil/media/media_files/2025/09/15/maoist-killed-2-2025-09-15-18-28-36.jpg)
“ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த சஹதேவ் சோரன் மற்றும் மேலும் 2 மாவோயிஸ்டுகளின் உடல்கள் தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டன” என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார். Photograph: (File Photo)
ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டம், கோரஹர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்தித்ரி காட்டில், காலை 6 மணியளவில் இந்த மோதல் நடந்தது.
“ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த சஹதேவ் சோரன் மற்றும் மேலும் 2 மாவோயிஸ்டுகளின் உடல்கள் தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டன” என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார். Photograph: (File Photo)
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், தலைக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் உட்பட 3 மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டனர் எனப் போலீசார் தெரிவித்தனர்.
கோரஹர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்தித்ரி காட்டில், இன்று காலை 6 மணியளவில், தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த சஹதேவ் சோரன் என்பவரின் குழுவினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இந்த மோதல் வெடித்ததாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.
“தேடுதல் நடவடிக்கையின் போது, 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த சஹதேவ் சோரன் மற்றும் மேலும் 2 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.
மேலும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று அந்த மூத்த அதிகாரி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.