Advertisment

மராத்தா சமூகத்திற்கு 10% இடஒதுக்கீடு: மகாராஷ்டிரா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கும் மசோதாவை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிராஅரசு ஒருமனதாக நிறைவேற்றியது.

author-image
WebDesk
New Update
Maratha quota bill passed unanimously in Maharashtra Assembly Tamil News

மகாராஷ்டிரா பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாநில அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மசோதாவை தாக்கல் செய்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Maharashtra: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கும் மசோதாவை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு ஒருமனதாக நிறைவேற்றியது. 

Advertisment

ஓய்வு பெற்ற நீதிபதி சுனில் சுக்ரே தலைமையிலான மகாராஷ்டிரா பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (எம்.பி.சி.சி) மாநில அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், மகாராஷ்டிராவில் மொத்த இடஒதுக்கீடு 62 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

 மகாராஷ்டிராவில், 2001 மாநில இடஒதுக்கீடு சட்டத்தைத் தொடர்ந்து, மொத்த இடஒதுக்கீடு 52 சதவீதமாக இருந்தது. இதில் பட்டியலிடப்பட்ட சாதியினர் (13%), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (7%), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (19%), சிறப்புப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (2%), விமுக்த ஜாதி (3%), நாடோடி பழங்குடியினர் பி (2.5%), பழங்குடியினர் சி-தங்கர் (3.5%) மற்றும் நாடோடி பழங்குடியினர் டி-வஞ்சரி (2%) ஆகியோருக்கான ஒதுக்கீடுகள் அடங்கும். 

2019 ஆம் ஆண்டில் மும்பை உயர்நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்ட 12-13 சதவீத மராத்தா ஒதுக்கீட்டின் மூலம், மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு 64-65 சதவீதமாக உயர்ந்தது. இருப்பினும் மே மாதத்தில் உச்ச நீதிமன்றத்தால் அதைத் தள்ளுபடி செய்தது. அதனால், 2021ல் மீண்டும் இடஒதுக்கீடு 52 சதவீதமாக இருந்தது. தற்போது மசோதா நிறைவேற்றியதன் மூலம், அது மீண்டும் 64 சதவீதமாக உயர்ந்துள்ளது. 10% பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) ஒதுக்கீடும் நடைமுறையில் உள்ளது.

மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், "சட்டத்தின் சோதனையிலும் இடஒதுக்கீடு நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. 50 சதவீத வரம்பை தாண்டிய மாநிலங்கள் பல உள்ளன. நீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டை பாதுகாப்பதில் இந்த அரசு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. எல்லா சட்ட தடைகளையும் நீக்கி இந்த இடஒதுக்கீட்டை வழங்குகிறோம்" என்றார்.

மராத்தா சமூகத்தினர் மட்டுமின்றி, தங்கர், லிங்காயத், முஸ்லிம் உள்ளிட்ட சமூகத்தினரும் மாநிலத்தில் இடஒதுக்கீடு கோரி தங்கள் கோரிக்கைகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Maratha quota bill passed unanimously in Assembly

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment