Advertisment

பால் கொள்முதல் விலை ரூ. 50 உயர்த்த கோரிக்கை; புதுச்சேரி அரசைக் கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 உயர்த்தி வழங்க வேண்டும், நல வாரியம் அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புதுவை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

author-image
WebDesk
New Update
milk protest

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புதுவை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (screenshot from Villangam Tv)

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 உயர்த்தி வழங்க வேண்டும், நல வாரியம் அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புதுவை அரசை கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெருமாள் சிறப்பு பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.

ஆர்பாட்டத்தில் 100-க்கும் ‌ மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு, பால் கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்,75 சதவீத மானிய விலையில் ஆண்டு முழுவதும் மாட்டு தீவனம் வழங்க வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், புதுவை அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment