Advertisment

56 வயது முதியவருடன் தனிக்குடித்தனம்: இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

56 வயது முதியவருடன் உறவில் இருந்த இளம்பெண் துண்டுதுண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Mira Road killing Police recover three buckets of chopped body parts from suspects flat

கைது செய்யப்பட்ட மனோஜ் சனோ

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள கீதா நகரில் 56 வயதான மனோஜ் சனோ என்பவர் 32 வயதான சரஸ்வதி வைத்யா என்ற பெண்ணுடன் வசித்துவந்தார்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை கடந்த சில நாள்களாக காணவில்லை. மேலும் சனோ வீட்டிலும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

Advertisment

இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சனோ இளம்பெண்ணை கொன்று அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டியுள்ளார்.

அதற்காக மரம் வெட்டும் கருவி ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் அவரின் உடலின் சில பாகங்களை வீட்டில் உள்ள சமையலறையில் வைத்து சமைத்து தூக்கி வீசியுள்ளார்.

தற்போது சனேவை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்து 3 பக்கெட்டில் இருந்து உடலின் பாகங்கள் கை இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்துவருகிறது. இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment