New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/04/mizo-boy2_1200_ie.jpg)
Mizoram Boy
இந்த வயதிலேயே சிறுவனுக்கு இருக்கும் மனிதாபிமானமும், பொறுப்புணர்வும் அனைவரையும் வியக்க வைத்தது.
Mizoram Boy
இரண்டு நாட்களாக இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறான் குட்டி பையன் ஒருவன்.
மிசோராம் மாநிலம், அய்சால் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டு இருந்திருக்கிறான். அப்போது பக்கத்து வீட்டுக்காரரின் கோழி குஞ்சு மேல், சைக்கிள் ஏறி விட, தனது சேமிப்பு பணத்தை ஒரு கையிலும், மறு கையில் கோழி குஞ்சையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனை விரைந்திருக்கிறான்.
அங்கு கோழி குஞ்சை காப்பாற்றும்படி உதவி கேட்டிருக்கிறான். இதனை படம் பிடித்து சங்கா என்பவர், மனமுருகி பாராட்டி முகநூலில் பதிவு செய்துள்ளார். உடனே அந்தப் பதிவு வைரலாகியது.
இந்த வயதிலேயே சிறுவனுக்கு இருக்கும் மனிதாபிமானமும், பொறுப்புணர்வும் அனைவரையும் வியக்க வைத்தது.
இதைத் தொடர்ந்து சிறுவன் படிக்கும் பள்ளியிலும் அவனுக்கு சால்வை போர்த்தி, சான்றிதழ் வழங்கி பாராட்டியிருக்கிறார்கள்.
மிசோராமில் சால்வை போர்த்தி பாராட்டுவது என்பது மிகப் பெரிய கெளரவமாம். அதோடு ஒவ்வொரு சால்வைக்கும் வித்தியாச மாண்புகள் இருக்கிறதாம். அதன்படி இந்தச் சிறுவனுக்கு வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு போர்த்தப்படும் சால்வை அணிவிக்கப்பட்டுள்ளதாம்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.