மோடி- பைடன் சந்திப்பு: ஐ.எஸ்.எஸ் முதல் அணுசக்தி உலைகள் வரை முக்கிய ஒத்துழைப்புகள் பற்றி பேச்சு

பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகளில் முக்கிய ஒத்துழைப்புகள் குறித்து இருநாட்டு தலைவர்கள் பேச்சு

பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகளில் முக்கிய ஒத்துழைப்புகள் குறித்து இருநாட்டு தலைவர்கள் பேச்சு

author-image
WebDesk
New Update
Modi-Biden meet.jpg

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் உடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்.8) இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 3 மாதங்களுக்கு முன் மோடி அமெரிக்கா சென்ற போது இருவரும் சில முக்கிய துறை ஒப்புதங்கள் குறித்து ஆலோசித்த நிலையில் நேற்றைய சந்திப்பு அதிலிருந்து ஒரு படி முன்னேறி உள்ளது.  இந்தியாவும் அமெரிக்காவும் வெள்ளியன்று இரு நாடுகளும் விண்வெளி தொடர்பான வர்த்தகத்தில் அதிக ஒத்துழைப்புக்கான பணிக்குழுவை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தன.

Advertisment

வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஜோ பிடன் இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, ஜி 20 உச்சிமாநாட்டின் பக்கவாட்டில், அணுசக்தி துறையில் குறிப்பாக அடுத்த தலைமுறை சிறிய மட்டு உலை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து பேசினர். 

சர்வதேச விண்வெளி நிலைய ஒப்பந்தம்

இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடியின் அமெரிக்க அரசு பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு அறிக்கையில் விண்வெளி ஒத்துழைப்பு மிக முக்கியமான பகுதியாக அமைந்தது. 

Advertisment
Advertisements

அப்போது, ​​கிரக ஆய்வுக்கான அமெரிக்கா தலைமையிலான ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியாவும் இணையும் என்றும், இரு நாடுகளின் விண்வெளி நிறுவனங்களான இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து 2024-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் என்றும் இரு நாடுகளும் அறிவித்திருந்தன.

வெள்ளியன்று அவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து கூட்டு அறிக்கை அந்த உறுதிமொழிகளை மீண்டும் வலியுறுத்தியது மற்றும் இன்னும் கொஞ்சம் முன்னேறியது.

"விண்வெளி ஒத்துழைப்பின் அனைத்துத் துறைகளிலும் புதிய எல்லைகளை அடைவதற்கான ஒரு போக்கை நிர்ணயித்துள்ள தலைவர்கள், தற்போதுள்ள இந்தியா-அமெரிக்க சிவில் விண்வெளி கூட்டுப் பணிக்குழுவின் கீழ் வணிக விண்வெளி ஒத்துழைப்புக்கான பணிக்குழுவை நிறுவுவதற்கான முயற்சிகளை வரவேற்றனர்" என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் கிரக பாதுகாப்பில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன.

சிறுகோள் கண்டறிதல் மற்றும் மைனர் பிளானட் சென்டர் மூலம் கண்காணிப்பதில் இந்தியாவின் பங்கேற்பு உட்பட, விண்கற்கள் மற்றும் பூமிக்கு அருகில் உள்ள பொருட்களின் தாக்கத்திலிருந்து பூமி மற்றும் விண்வெளி சொத்துக்களை பாதுகாக்க, கிரக பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைப்பை அதிகரிக்க இந்தியாவும் அமெரிக்காவும் உத்தேசித்துள்ளன என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றி மற்றும் ஆதித்யா எல்.1 திட்டத்திற்கு பைடன் வாழ்த்துக் கூறியதாக அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அடுத்த ஆண்டு நாசா-இஸ்ரோ கூட்டு மனித விண்வெளிப் பயணம் குறித்த விவாதங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் கூறினார். 

அணுசக்தி பக்கத்தில், இரு நாடுகளும் காலநிலை மாற்றக் கருத்தாய்வு காரணமாக தூய்மையான எரிசக்தி ஆதாரங்களுக்கு மாற்றத்தை தீவிரப்படுத்த அணுசக்தியை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தின. இரு தலைவர்களும் "அணுசக்தியில் இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு இரு தரப்பிலும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையே தீவிர ஆலோசனைகளை வரவேற்றனர், இதில் அடுத்த தலைமுறை சிறிய மட்டு உலை தொழில்நுட்பங்களை கூட்டு முறையில் உருவாக்குவது உட்பட இருநாடுகளும் ஒத்துழைப்பு செய்ய உள்ளனர் ".

அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா உறுப்பினராக இருப்பதற்கான தனது ஆதரவை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்தியது, மேலும் இந்த இலக்கை அடைய மற்றவர்களுடன் தொடர்ந்து பேசுவதாகக் கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi Joe Biden

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: