Advertisment

உலக விவகாரங்கள்...இருதரப்பு உறவை தாண்டி ஆலோசிக்கும் மோடி, பைடன்

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது மட்டுமின்றி பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பைடனும், மோடியும் விவாதிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
May 22, 2022 11:05 IST
New Update
உலக விவகாரங்கள்...இருதரப்பு உறவை தாண்டி ஆலோசிக்கும் மோடி, பைடன்

டோக்கியோவில் நடைபெறும் குவாட் கூட்டமைப்பு மாநாட்டிற்கு இடையே, மே 24 அன்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை, பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பு, இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் உறுதிப்பாடு ஆகியவை பிரதமர் மோடி, அதிபர் பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோருக்கு இடையேயான விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்பதை மத்திய அரசு தனது அறிக்கையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, பைடனுடனான மோடி சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் இருதரப்பு உறவை வலுபடுத்துவது மட்டுமின்றி பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதும் அடங்கும் என தெரிவித்துள்ளார்.

அவர், குவாட் உச்ச மாநாட்டில் காலநிலை நடவடிக்கை, நிலையான உள்கட்டமைப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி, இணைய உள்கட்டமைப்பின் பாதுகாப்பு, கோவிட் ரெஸ்பான்ஸ், சுகாதார பாதுகாப்பு, மரபணு கண்காணிப்பு, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தொற்றுநோய்க்கான தயார்நிலை போன்ற கோவிட்-க்கு பிந்தைய பொருளாதாரம் மற்றும் சுகாதாரத் துறை மேலாண்மை குறித்து விவாதிக்குப்படும் என அடையாளம் கண்டுள்ளார்.

டோக்கியோவில் நடைபெறவிருக்கும் உச்சி மாநாடு, குவாடின் முன்முயற்சிகளில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்கும், எதிர்காலத்திற்கான வழிகாட்டுதலை வழங்குவதற்கும் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதம் வரலாம் என கருதுவதாக தெரிவித்தார்.

குவாட் உச்சி மாநாட்டின் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக இலங்கையின் பொருளாதார நெருக்கடி இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த குவாத்ரா, குறிப்பிட்ட விவரங்களுக்குள் செல்லாமல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் இரண்டையும் தலைவர்கள் விவாதிப்பார்கள் என்றார்.

மேலும் அவர், உக்ரைன் பிரச்சினையில், இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. போரை உடனடியாக நிறுத்துவதும், ராஜதந்திரம் மற்றும் உரையாடல் மூலம் நெருக்கடியைத் தீர்ப்பது இந்தியாவின் நிலைப்பாடு ஆகும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Modi #Joe Biden
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment