/indian-express-tamil/media/media_files/2025/09/06/modi-us-relations-2025-09-06-18-38-57.jpg)
Modi US relations
டிரம்ப்பின் சமீபத்திய கருத்துகள் அமெரிக்க-இந்திய உறவை ஒரு புதிய திசைக்கு திருப்பியிருக்கின்றன. சமீபத்தில், இந்தியப் பொருட்கள் மீது 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. மேலும், ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவதைக் கண்டித்து, மேலும் 25% கூடுதல் வரி விதிப்பதாகவும் ஒரு வாரத்திற்குப் பிறகு டிரம்ப் அறிவித்தார். இதனால், கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வந்தது.
இந்தச் சூழலில்தான் வெள்ளிக்கிழமை (இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை) ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் டிரம்ப் ஆச்சரியமான ஒரு கருத்தை வெளியிட்டார். இந்தியாவுடனான உறவுகளை மீண்டும் சரிசெய்ய தயாரா என்று கேட்டதற்கு, டிரம்ப் ஒரு புன்னகையுடன், "நான் மோடியுடன் எப்போதும் நண்பராகவே இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். சில சமயங்களில் அவர் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு சிறப்பு உறவு உள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை" என்று கூறினார்.
இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால், சில நாட்களுக்கு முன்புதான், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டு, "இந்தியா மற்றும் ரஷ்யாவை, சீனாவின் இருண்ட பகுதிகளிடம் நாம் இழந்துவிட்டோம். அவர்கள் நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தை ஒன்றாகப் பெறட்டும்!” என்று பதிவிட்டிருந்தார்.
Deeply appreciate and fully reciprocate President Trump's sentiments and positive assessment of our ties.
— Narendra Modi (@narendramodi) September 6, 2025
India and the US have a very positive and forward-looking Comprehensive and Global Strategic Partnership.@realDonaldTrump@POTUShttps://t.co/4hLo9wBpeF
டிரம்ப்பின் கருத்துக்களுக்கு சில மணி நேரத்திலேயே பிரதமர் மோடி X பக்கத்தில் பதிலளித்தார். “அதிபர் டிரம்பின் உணர்வுகளையும், நமது உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். இந்தியா மற்றும் அமெரிக்கா ஒரு மிகவும் நேர்மறையான, தொலைநோக்கு பார்வை கொண்ட, விரிவான மற்றும் உலகளாவிய உத்திசார்ந்த உறவைக் கொண்டுள்ளன" என்று பதிவிட்டிருந்தார்.
டிரம்பின் வரிவிதிப்புக்கு பிறகு மோடி வெளிப்படையாகப் பேசிய முதல் அறிக்கை இது.
அதே சமயம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "பிரதமர் மோடி அமெரிக்காவுடனான உறவுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கிறார். மேலும், மோடிக்கு டிரம்ப்புடன் தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு உள்ளது. ஆனால் முக்கிய விஷயம் என்னவென்றால், நாங்கள் அமெரிக்காவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்" என்று டெல்லியில் கூறினார்.
இதற்கிடையில், இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் வருடாந்திர உயர்மட்ட அமர்வில் பிரதமர் மோடி உரையாற்ற மாட்டார் என்று திருத்தப்பட்ட உரை நிகழ்த்துவோர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பெயர் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது; அவர் செப்டம்பர் 27 அன்று அமர்வில் உரையாற்றுவார்.
வெள்ளை மாளிகையில், டிரம்ப், ரஷ்யாவிலிருந்து இந்தியா "அதிக" எண்ணெயை வாங்குவது குறித்து தாம் "மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்" என்றும் கூறினார். “இந்தியா ரஷ்யாவிலிருந்து இவ்வளவு அதிக எண்ணெயை வாங்குவது குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன், அதையும் நான் அவர்களுக்குத் தெரிவித்தேன். நாங்கள் இந்தியாவிற்கு ஒரு பெரிய வரியை, 50 சதவீத வரியை, மிக உயர்ந்த வரியை விதித்தோம். நான் (பிரதமர் நரேந்திர) மோடியுடன் நன்றாகப் பழகுகிறேன், அவர் சிறந்தவர். அவர் சில மாதங்களுக்கு முன்பு இங்கே இருந்தார்” என்று டிரம்ப், அமெரிக்கா இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டதாகக் கூறிய தனது சமூக ஊடகப் பதிவு குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் எவ்வாறு செல்கின்றன என்ற கேள்விக்கு, டிரம்ப், "அவை சிறப்பாகச் செல்கின்றன. மற்ற நாடுகள் சிறப்பாகச் செய்கின்றன. நாம் அவை அனைத்தடனும் சிறப்பாகச் செயல்படுகிறோம். கூகுள் மட்டுமல்ல, நமது பெரிய நிறுவனங்கள் அனைத்துடனும் என்ன நடக்கிறது என்பதால் ஐரோப்பிய யூனியன் மீது நாம் வருத்தப்படுகிறோம்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.