Advertisment

ரிமோட் வாக்குப்பதிவு முறை: பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு.. டெமோவை நிறுத்திய தேர்தல் ஆணையம்

டெல்லி தேர்தல் ஆணையத்தில் ரிமோட் வாக்குப்பதிவு முறை தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
ரிமோட் வாக்குப்பதிவு முறை: பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு.. டெமோவை நிறுத்திய தேர்தல் ஆணையம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையம் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இந்த இயந்திர செயல்பாடுகள் மற்றும் அது தொடர்பாக கருத்துகளை கேட்க தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது. நேற்று (திங்கட்கிழமை) டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் உள்பட பெரும்பாலான கட்சிகள் ரிமோட் வாக்குப்பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த விஷயத்தில் கட்சிகள் இன்னும் ஆழமான விவாதத்தை கோருவதால், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் விளக்கத்திற்கு பிறகு ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல் ஆணைய அதிகாரியின் கூற்றுப்படி, பாஜக, காங்கிரஸ், என்சிபி, டிஎம்சி, பிஎஸ்பி, சிபிஎம், சிபிஐ மற்றும் என்பிபி ஆகிய எட்டு தேசியக் கட்சிகளைச் சேர்ந்த 16 பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற விவாதத்தில் 40 மாநிலக் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் மொத்தம் 67 பேர் கலந்து கொண்டனர்.

publive-image

அரசியல் தலைவர்கள் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிப்பது என்ற பரந்த நோக்கத்துடன் உடன்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில கட்சிகள் ஆவிஎம் விளக்க முறையை தங்கள் மாநிலங்களில் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். மற்றவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் உள்நாட்டு புலம்பெயர்ந்தோர் குறித்து வரையறுக்கப்பட வேண்டும் என்று விரும்பினர்.

இதன் விளைவாக, இந்த விஷயத்தில் கட்சிகளின் எழுத்துப்பூர்வ கருத்துக்களை சமர்ப்பிக்கும் தேதியை ஜனவரி 31 முதல் பிப்ரவரி 28 வரை நீட்டிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. தேர்தல் ஆணையம் டிசம்பர் 28, 2022 அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கும் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த முன்மொழிவு தொடர்பாக கடிதம் எழுதியது. புலம்பெயர்ந்தோர் மத்தியில் வாக்குப்பதிவு அதிகரிக்கும் எனத் குறிப்பிட்டிருந்தது.

publive-image

பாஜக மற்றும் பிஜேடி தவிர, மற்ற அனைத்து கட்சிகளும் இந்த திட்டத்தை எதிர்த்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பிரதிநிதித்துவப்படுத்திய பா.ஜ,க எழுத்துப்பூர்வமாக தங்கள் கருத்தை தெரிவிப்பதாக கூறியது. வாக்குப்பதிவு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், காணாமல் போன வாக்காளர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் பாஜக கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் பின்பற்ற வேண்டிய நடைமுறை விவாதத்திற்குரியது என்றும், அதன் பிறகு தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் யாதவ் கூறினார்.

ஆர்.வி.எம் தொடர்பாக தலைவர்கள் பல பிரச்சினைகளை எழுப்பினர். தேர்தல் பத்திரங்கள் முதல் வெறுப்பு பேச்சுக்கள், இ.வி.எம் செயல்பாடுகளை வரை கேள்விகளை எழுப்பினர். தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத் தன்மை இல்லாதவை என்றும், சமநிலையை அழிக்கின்றன என்றும் அவர்கள் வாதிட்டனர்.

காங்கிரஸ் சார்பில் திக்விஜய சிங், பிரவீன் சக்ரவர்த்தி கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் ஆணையம் தயாரித்த கருத்துக் குறிப்பும், தலைவர்களுக்கு வழங்கப்பட்ட விளக்கமும் கமிஷன் குழப்பமாக உள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கணக்கெடுப்பு இல்லாதபோது, ​​அவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வசதிகளை வழங்குகிறார்கள் என்றார்.

ஆர்ஜேடியின் மனோஜ் குமார் ஜா கூறுகையில், வெறுப்புப் பேச்சுகள் குறித்த பிரச்சினையை எழுப்பினார். தேர்தல் ஆணையம் வாய்மூடிப் பார்வையாளராக இருந்த நிலையில் மக்கள் வெறுப்புப் பேச்சுக்களை வெளியிட்டு முதல்வர்களாகி விட்டனர் என்று பெயர் குறிப்பிடாமல் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், தேர்தல் நடைபெறும் மாநிலத்திற்கு வெளியே உள்ள தொலைதூர வாக்காளர்களுக்கு மாதிரி நடத்தை விதிகள் எவ்வாறு பின்பற்றப்படும். ற்றும் கட்சிகள், குறிப்பாக சிறிய கட்சிகள், பல இடங்களுக்கு வாக்குச் சாவடி முகவர்களை எவ்வாறு நியமிக்க முடியும் என்று கேள்விகளை எழுப்பினார்.

இது நடைமுறையில் சாத்தியம் இல்லை. மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க ஒரு நாளுக்குப் பதிலாக நான்கு நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தேன். அவர்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் (அவர்களுக்கு) இலவசமாக பயணம் செய்யலாம் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், டிஎம்சியின் கல்யாண் பானர்ஜி மற்றும் மஹுவா மொய்த்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்குகையில், கடந்த சில தேர்தல் சுழற்சிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2019 இல் 67.40 சதவீதமும், 2014 இல் 66.44 சதவீதமும் இருந்தது. சுமார் 30 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இந்தத் தேர்வைத் தவிர்க்க விரும்புவதாக கருத்துக்கணிப்புகள் கூறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment