Advertisment

மும்பை விளம்பர பதாகை விபத்து: பதாகை ஓனர் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்

மும்பை ராட்சத விளம்பர பதாகையின் உரிமையாளர் மீது ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்கு, சட்டவிரோதமாக விளம்பர பதாகை வைத்ததாக 21 முறை அபராதமும் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
mumb bil.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மும்பையின் காட்கோபர் பகுதியில் நேற்று (மே 13) பெட்ரோல் பங்க் மீது ராட்சத விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்று உடன் மழை பெய்த நிலையில் பதாகை சரிந்து விழுந்தது. இந்நிலையில், அந்த விளம்பர பதாகை வைத்த உரிமையாளர் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் வழக்குகள் பதியபட்டுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் மும்பை காவல்துறையினர் அந்த விளம்பர பதாகை உரிமையாளர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். 

Advertisment

விபத்து நடந்த பந்த் நகர் போலீசார், திங்கள்கிழமை இரவு விளம்பர பதாகை ஒப்பந்தம் செய்த ஈகோ மீடியா பிரைவேட் லிமிடெட் இயக்குனர் பவேஷ் பிரபுதாஸ் பிண்டே (51) மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இந்த நிறுவனம் அங்கு விளம்பர செய்ய 10 ஆண்டுகள் குத்ததைக்கு எடுத்துள்ளனர். 

நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்த ஆண்டு ஜனவரி 24 அன்று முலுண்ட் காவல் நிலையத்தில் பிண்டே மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறுதியில் அவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.  “அவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று முலுண்ட் காவல் நிலைய மூத்த ஆய்வாளர் அஜய் ஜோஷி தெரிவித்தார்.

2009 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் பிண்டே போட்டியிட்டார். அப்போது 

அனுமதியின்றி பேனர்களை வைத்ததற்காக மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்எம்சி) சட்டத்தின் கீழ் தமக்கு 21 முறை அபராதம் விதிக்கப்பட்டதாகவும், செக் மோசடி வழக்கில் 2 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/mumbai/mumbai-hoarding-owner-booked-in-rape-case-fined-at-least-21-times-for-illegal-billboards-in-past-9327704/

இது தவிர, 2009-ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் முலுண்டில் போட்டியிட்ட போது அவர் சமர்ப்பித்த ஆவணங்களின்படி, பிடே 21 முறை MMC சட்டத்தின் பிரிவுகள் 328 (அனுமதியின்றி பதாகை வைத்தல்) மற்றும் 471 (அபராதம்) ஆகியவற்றின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், மேலும் இரண்டு வழக்குகள் இருப்பதாகவும் அறிவித்தார். NI சட்டத்தின் கீழ் வழக்குகள். வழக்குகளின் நிலை தெளிவாக இல்லை.

நேற்று திங்கள்கிழமை இரவு பந்த் நகர் காவல்நிலையத்தில் பிண்டே மீது சட்டப்பிரிவு 304, 338,  337 (அலட்சியமான செயலால் காயப்படுத்துதல்), இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 34 ஆகியவற்றின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் (EEH) பந்த் நகரில் பெட்ரோல் பம்ப் அருகே வைக்கப்பட்டிருந்த பதாகை விதிகளை மீறி  அனுமதிக்கப்பட்ட அளவு விட மிகப் பெரியதாக வைக்கப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்ட அளவு 40 x 40 அடிக்கு மீறி 120 x 120 அடியில் பதாகை வைக்கப்பட்டிருந்தது. 

திங்களன்று, பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) தலைவர் பூஷன் கக்ரானி, காட்கோபரில் வைக்கப்பட்டிருந்த பதாகை வைக்க அனுமதிக்காததால் அது சட்டவிரோதமானது என்று கூறினார். கக்ரானி கூறுகையில், “சம்பவம் நடந்த இடத்தில் ரயில்வே நிலத்தில் நான்கு போர்டிங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.  அதில் ஒன்று சரிந்து  விழுந்துள்ளது. கடந்த ஒரு வருடமா பதாகை வைப்பதற்கு மாநகராட்சி ஆட்சேப்பம் தெரிவித்து வந்தது ” என்று கக்ரானி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment