மழையோடு மழையாக வேலைக்கு செல்வோரின் கண்ணீர்த் துளிகள் - யய்யாடி எவ்ளோ தண்ணீ!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mumbai rains funny memes social medias - மழையோடு மழையாக வேலைக்கு செல்வோரின் கண்ணீர்த் துளிகள் - யய்யாடி எவ்ளோ தண்ணீ!!

Mumbai rains funny memes social medias - மழையோடு மழையாக வேலைக்கு செல்வோரின் கண்ணீர்த் துளிகள் - யய்யாடி எவ்ளோ தண்ணீ!!

மும்பையில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. புறநகர் பகுதியான தானேவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியதுடன் சுரங்கப்பாதைகள் மூழ்கின. சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பலத்த மழையால் பால்கர் மாவட்டமும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வியாழக்கிழமை வரை மிக கனமழை பெய்யும் என்று புதிய ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு மும்பை மற்றும் பிற அருகிலுள்ள மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தயவுசெய்து போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். அவசர காலங்களில் 100 ஐ டயல் செய்யுங்கள். மும்பையை கவனித்துக் கொள்ளுங்கள் என மும்பை போலீஸ் கூறி உள்ளது.

இதனால் மும்பையில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அலுவலகம் செல்பவர்கள் இந்த கனமழையில் அலுவலகம் சென்றே தீர வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் ஆபீஸ் கம் நெட்டிசன்கள் தங்கள் வேதனைகளை சமூக தளங்களில் புலம்பித் தள்ளி வருகின்றனர்.

Advertisment
Advertisements

4, 2019

4, 2019

4, 2019

4, 2019

கடும் மழையால் உண்மையில் மும்பைவாசிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Mumbai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: