Advertisment

மோடி அமைச்சரவை விரிவாக்கம்: அரசியல், நிர்வாக காரணங்கள் என்ன?

தற்போது 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதனால் அமைச்சரவை பலம் 77ஆக அதிகரித்துள்ளது. இதில் புது முகங்கள் 36பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Modi-cabinet

கொரோனா இரண்டாவது அலையால் மத்திய அரசு நெருக்கடிக்குள்ளான பிறகு, பிரதமர் மோடி தனது அமைச்சரவைக் குழுவில் முதல் முறையாக மிகப் பெரிய மாற்றத்தை செய்துள்ளார். 2014ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து நடைபெறும் முதலாவது மாற்றம் இது.

Advertisment

பிரதமரின் அமைச்சரவையில் 81 பேர் அமைச்சர்கள் வரை இடம்பெற முடியும். இந்நிலையில் அமைச்சரவையில் 53 பேர் மட்டுமே இருந்தனர். கொரோனா 2வது அலை குறைந்த பிறகு புதிய அமைச்சர்களை தேர்வு செய்வது தொடர்பாகவும், செயல்படாத அமைச்சர்களை நீக்குவது தொடர்பாகவும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வந்தார்.

இதைதொடர்ந்து தற்போது 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதனால் அமைச்சரவை பலம் 77ஆக அதிகரித்துள்ளது. இதில் புது முகங்கள் 36பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேபினட் அந்தஸ்துள்ள, 23 அமைச்சர்களில் பலரிடம், இரண்டு அல்லது மூன்று அமைச்சகங்கள் உள்ளன. அதேபோல், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் சிலரிடமும், இரண்டுக்கு மேற்பட்ட அமைச்சகங்கள் உள்ளன. தற்போது அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதில் ஏழு இணையமைச்சர்கள், 'கேபினட்' அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சராக இருந்த தாவர் சந்த் கெஹ்லோட் பதவி விலகிய நிலையில் கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கொரோனா 2வது அலையை சரிவர கையாளதாது, தடுப்பூசிகள் பற்றாக்குறை போன்ற குற்றச்சாட்டை அடுத்து அவரை ராஜினாமா செய்ய சொல்லியிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், பிரகாஷ் ஜவடேகர்(கேபினட் அமைச்சர்கள்) மற்றும் சந்தோஷ் கங்வார் போன்றவர்கள் அமைச்சரவையில் இருந்து வெளியேறியதற்கு காரணம் புலப்படவில்லை.

வேப்பம் பூசிய யூரியா (கவுடா), சீன எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருள் பயன்பாட்டு நிறுவனங்களைத் தூண்டுவது மற்றும் ட்விட்டர் அதன் அரசியல் சார்பு (பிரசாத்) க்காக பணிக்கு எடுத்துக்கொள்வது, தேசிய கல்வி கொள்கை (நிஷாங்க்); சுற்றுச்சூழல் அனுமதி (ஜவடேகர்) அல்லது தொழிலாளர் குறியீடுகள் (கங்வார்) என அமைச்சர்கள் அனைவரும் தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏழு மூத்த அமைச்சர்களில் ஐந்து பேர் சமூக துறை அமைச்சகங்களான சுகாதாரம், கல்வி, சமூக நீதி,தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளை சேர்ந்தவர்கள். முக்கியமாக பொருளாதார அமைச்சகங்கள் மாற்றப்படவில்லை. தொற்றுநோய்க்கு முன்பே பொருளாதாரம் சிதைந்து, வளர்ச்சி முதல் பணவீக்கம் வரை தற்போது சவால்களை எதிர்கொண்டுள்ளது.

மேற்குவங்கத்தை சேர்ந்த பாபுல் சுப்ரியோ மற்றும் திபஸ்ரீ சவுத்ரி, மகாராஷ்ட்ராவை சேர்ந்த சஞ்சய் தோத்ரே, ஹரியானாவை சேர்ந்த ரத்தன் லால் கட்டாரியா மற்றும் ஒடிசாவை சேர்ந்த பிரதாப் சந்திர சாரங்கி ஆகிய 5 மாநில அமைச்சர்கள் புதிய முகங்களுக்கு வழிவிட்டு அமைச்சரவையில் இருந்து வெளியேறினர்.

கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் 57 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. ராஜினாமா மற்றும் கூட்டணி கட்சிகளின் வெளியேற்றத்திற்கு பிறகு 53ஆக எண்ணிக்கை குறைந்தது. தற்போத விரிவாக்கத்திற்கு பிறகு அமைச்சரவை பலம் 77ஆக உள்ளது. மொத்தம் 15 கேபினட் அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் 8 பேர் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றனர். மற்ற 7 பேர் புதியவர்களாவர்.

அமைச்சரவையில் நேரடியாகக் கொண்டுவரப்பட்ட எட்டு புதிய உறுப்பினர்களில் இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் நாராயண் ரானே மற்றும் சர்பானந்தா சோனோவால், கூட்டணி கட்சிகளின் தலைவர்களான ஆர்.சி.பி சிங் மற்றும் பசுபதி பராஸ் ஆவர். பூபேந்தர் யாதவ் மற்றும் வீரேந்திர குமார் ஆகியோர் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர்களாக தங்கள் பங்கை மேசையில் கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய பிரதேசத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்ததற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மந்திரி ஜோதிராதித்யா சிந்தியாவும் அமைச்சரவைக்கு உயர்த்தப்பட்டார்.

2019ல் ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த தீவிரமான மாற்றம் அரசியல் சத்தத்திலிருந்து ஒரு இடைவெளியை குறிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அரசின் பல திட்டங்கள் செலவுகளோடு சமூக மற்றும் அரசியல் கவலைகள் ஏற்படுத்தியது.

நாடு தழுவிய CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், விவசாயிகளின் போராட்டங்கள், 1984 சீக்கிய எதிர்ப்பு கலவரங்களுக்குப் பின்னர் டெல்லியில் ஏற்பட்ட மிக மோசமான வகுப்புக் கலவரங்கள், ஜம்மு-காஷ்மீரில் நீண்டகால இணையத் தடை, தொற்றுநோய்களின் முதல் அலைகளில் புலம்பெயர்ந்தோர் துன்பம் மற்றும் பேரழிவு தந்த இழப்பு ஆகியவை இதில் அடங்கும்.

மத்திய மட்டத்தில் ஆட்சியை மீட்டமைக்கும் உடனடி பணிக்கு அப்பால், அரசின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளில் முடியவடைய உள்ளது. இதை மனதில் வைத்தி எதிர்கால அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்த அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.பிரிதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் வர உள்ளதையொட்டியும் புதிய முகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, விரிவாக்கம் பாஜகவின் தேர்தல் செல்வாக்கிற்கு முக்கியமான பெரிய மாநிலங்களில் சமூக மற்றும் துணை பிராந்திய பிரதிநிதித்துவத்திற்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயல்கிறது. உ.பி., மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் குஜராத், 200 க்கும் மேற்பட்ட மக்களவை இடங்களைக் கொண்டுள்ளது.

ஜே.டி.யு மற்றும் எல்.ஜே.பி பிரிவின் பிரதிநிதிகளைச் சேர்ப்பதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் சிவசேனா மற்றும் அகாலிதளத்தை எவ்வாறு இழந்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு பீகாரில் தனது கூட்டணிகளை ஆழப்படுத்தவும் பாஜக நம்புகிறது.

உ.பி.க்கு ஏழு புதிய அமைச்சர்கள் (மூன்று தலித்துகள் மற்றும் மூன்று ஓபிசிக்கள் மற்றும் ஒரு பிராமணர்) கிடைத்த நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து நான்கு புதிய அமைச்சர்களும், குஜராத்தில் இருந்து மூன்று புதிய அமைச்சர்களும் அமைச்சரவை பதவிக்கு உயர்த்தப்பட்ட இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர் (பார்ஷோட்டம் ரூபாலா மற்றும் மன்சுக் பாய் மாண்டவியா).அமைச்சரவையில் 12 தலித்துகள், 27 ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 11 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment