இந்தியாவின் கலாச்சார ஆலமரம் ஆர்.எஸ்.எஸ். தான் - பிரதமர் மோடி பெருமிதம்

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள்தான் நக்சல்வாதம் வளர்ந்ததாக குற்றஞ்சாட்டிய பிரதமர் மோடி, வளர்ச்சி மற்றும் நலத் திட்ட முயற்சிகளால் நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிக்கான புதிய சகாப்தம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள்தான் நக்சல்வாதம் வளர்ந்ததாக குற்றஞ்சாட்டிய பிரதமர் மோடி, வளர்ச்சி மற்றும் நலத் திட்ட முயற்சிகளால் நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிக்கான புதிய சகாப்தம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
a

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் மீதான ஒடுக்குமுறைக்கு மத்தியில், பிரதமர் மோடி பா.ஜ.க. அரசின் முயற்சிகளைப் பாராட்டினார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள்தான் நக்சல்வாதம் வளர்ந்ததாக குற்றஞ்சாட்டிய பிரதமர் மோடி, வளர்ச்சி மற்றும் நலத் திட்ட முயற்சிகளால் நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிக்கான புதிய சகாப்தம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். புதிய அனல் மின் நிலையங்கள் மற்றும் எரிவாயு குழாய்கள் முதல் புதிய சாலை, பள்ளி மற்றும் வீட்டுவசதி திட்டங்கள் என ரூ.33,700 கோடி மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

Advertisment

இந்தியாவின் கலாச்சார ஆலமரம் ஆர்.எஸ்.எஸ் - மோடி

முன்னதாக நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் அழியாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம் போன்றது என்றார். மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையக் கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், யோகா மற்றும் ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய துறைகள் உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்று வருவதாக கூறினார். 1956-ல் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய தீக்ஷாபூமியைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, நாக்பூரில் சோலார் டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் லிமிடெட்டின் வெடி மருந்து ஆலையை பார்வையிட்டார். இந்த பயணத்தின்போது மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் உடனிருந்தனர். 

பிரதமரின் ஆர்.எஸ்.எஸ். தலைமையக வருகையின் முக்கியத்துவம்: 

Advertisment
Advertisements

மோடி கடைசியாக 2013-ம் ஆண்டு குஜராத் முதல்வராகப்பணியாற்றிய போது ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றார். பிரதமராக இது அவரது முதல் பயணம். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய நாட்களில் பா.ஜ.க.-விற்கும் ஆர்.எஸ்.எஸ்.-க்கும் இடையே நிலவும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. 

தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் , பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, கட்சிக்கு இனி ஆர்.எஸ்.எஸ். கைகோர்த்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்தார். அன்றிலிருந்து ஆர்.எஸ்.எஸ்- பாஜக உறவுகளை சரிசெய்ய முயற்சித்து வருகின்றன. பிப்ரவரியில் நடந்த அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பாராட்டி, அந்த அமைப்பு "என்னைப் போன்ற லட்சக்கணக்கானவர்களை" "நமது நாட்டிற்காக வாழ" ஊக்கப்படுத்தியதாகக் கூறினார்.

Pm Modi Chhattisgarh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: