/tamil-ie/media/media_files/uploads/2020/08/AP20207344478809.jpg)
New infectious disease in China : அட கொரோனாவுக்கே இன்னமும் மருந்து கண்டு பிடிக்க முடியாமல் ஒவ்வொரு நாடும் திணறிக் கொண்டிருக்கையில் நாள் ஒரு வண்ணமாக ஒவ்வொரு வைரஸ் நோய் தொடர்பான தகவல்கள் சீனாவில் இருந்தே வந்து கொண்டிருக்கிறது.
தற்போது பூச்சிகள் (நச்சு ஈ, வண்டுகள் மற்றும் உண்ணிகள்) மூலமாக புதிய வைரஸ் நோய் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த நோய்க்கு 7 பேர் பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் இந்த பூச்சிகளால் ஏற்பட்ட வைரஸ் தொற்றால் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். சீனாவின் குளோபல் டைம்ஸ் நாளேடு, இந்த நோய்கள் மனிதர்கள் மூலம் மற்ற மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : புகைப்பதை நிறுத்தியதால் சொந்த வீடு … 8 வருடத்தில் 5 லட்சம் சேமித்த நபர்!
கிழக்கு மாகாணத்தில் இருக்கும் ஜியாங்க்ஸ் மாநிலத்தில் 37 நபர்களும், அன்ஹூ மாநிலத்தில் 23 நபர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரு நோயாளியின் உடலில் உள்ள ரத்தம், சளி மூலம் மற்றவர்களுக்கும் இந்த நோய் பரவும் தன்மை கொண்டது. மக்கள் பூச்சிக்கடிகள் போன்ற ஆபத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் அச்சம் கொள்ள தேவையில்லை என்று ஹிஜியாங்க் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஹெங் ஜி பாங் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.